விஜய் டிவியில் எதிர்பாராத திருப்பங்களுடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலில் தன் தாயிடம் போட்ட சபதத்தை நிறைவேற்றுவதற்காக தனியாகச் சென்று கம்பனி நடத்தி முன்னேறி வருகின்றார்.
தமிழின் நேர்மை குணங்களை அறிந்த கோதை கொஞ்சம் கொஞ்சமாக தமிழைப் பற்றி புரிந்து கொள்கின்றார்.அத்தோடு அர்ஜீன் மீது சந்தேகத்திலும் இருக்கின்றார்.
இப்படியான நிலையில் தற்பொழுது ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதாவது கோதை சரஸ்வதி எல்லோரும் வளைகாப்பு நிகழ்ச்சிக்கொன்றிற்குச் செல்கின்றனர். அங்கே அர்ஜுன் சரஸ்வதியை அவமானப்படுத்தும் படி ஒரு பெண்ணிடம் சென்று சொல்ல, அந்தப் பெண்ணும் சரஸ்வதிக்கு குழந்தை இல்லை என்பதை குத்திக் காட்டுகின்றார்.
இதனால் கடுப்பான கோதை அவரைத் திட்டுவதோடு சரஸ்வதி நலங்க வைக்காவிட்டால் தானும் வைக்கப் போவதில்வை எனச் சொல்கின்றார். இதனால் சரஸ்வதி சந்தோஷப்படுகின்றார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.
Listen News!