இயக்குநர் பாண்டியராஜனின் வம்சம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் தான் நடிகர் அருள்நிதி.இவர் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரனும் ஆவார்.
அருள்நிதியின் ‘தேஜாவு’ படத்தின் ரிலீஸ் மற்றும் சேட்டிலைட் உரிமை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.அறிமுக இயக்குநர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘தேஜாவு’.
மேலும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடித்துள்ளார். வழக்கம்போல் இந்த படத்திலும் தன்னுடைய இயல்பான நடிப்பை அருள்நிதி வெளிப்படுத்தியுள்ளதால் படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இப்படத்தை விஜய் பாண்டியின் ஒயிட் கார்ப்பெட் பிலிம்ஸ் மற்றும் பிஜி முத்தையா இணைந்து தயாரித்து வருகின்றனர். அத்தோடு ஜிப்ரான் இசையில் பாடல்கள் உருவாகி வருகின்றது. இந்த படத்தில் கதாநாயகியாக ஸ்மிருதி வெங்கட் நடித்துள்ளார்.
மேலும் இவர்களுடன் மதுபாலா, காளி வெங்கட், ராகவ் விஜய், மைம் கோபி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.ஏற்கனவே இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் இப்படத்தின் சேட்டிலைட் உரிமையை கலர்ஸ் தமிழ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது
இந்த படத்தின் இறுதி கட்டப் பணிகள் தற்போது முடிந்துள்ள நிலையில் அருள்நிதியின் பிறந்தநாள் 21ம் தேதி என்பதால் அதற்கு அடுத்த நாள் ஜூலை 22 ம் தேதி இப்படத்தை வெளியிடுவதாக படக் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதுகுறித்த ஒரு போஸ்டர் வெளியாகி உள்ளது.
பிற செய்திகள்
- சிம்புவுக்கு ஒரே ஒரு போன் செய்தேன்…” ஹன்சிகா கூறிய விசயம்..!
- குஷ்பு ரசிகர்களுக்கு வெளியான சோக செய்தி..!
- ஹீரோவாக என்றி கொடுக்கவுள்ள ஆர்யன்-எந்த தொடர் தெரியுமா..?
- கண்ணம்மாவுக்கு லட்சுமி கொடுத்த அதிர்ச்சி-பாரதி கண்ணம்மா இன்றைய எபிசோடு அப்டேட்
- சந்தியாவிற்கு சாமியார் விட்ட சாபம்-சிவகாமி எடுத்த அதிர்ச்சி முடிவு – ராஜா ராணி 2 இன்றைய எபிசோட் அப்டேட்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!