டிமான்டி காலனி இரண்டாம் பாகத்தை உறுதி செய்த இயக்குனர்
2015-ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான திரைப்படம் டிமான்ட்டி காலனி.
இதில் அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
மு.க.தமிழரசு தயாரிப்பில் உருவான இந்தப் படத்தினை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டிருந்தது.அஜய் ஞானமுத்து அறிமுகமான முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் என்று தான் கூற வேண்டும்.
இதன்பிறகு அஜய் ஞானமுத்துவிற்கு நயன்தாராவை வைத்து ’இமைக்கா நொடிகள்’ என்ற படத்தை இயக்க வாய்ப்பு வந்தது. பிறகு விக்ரமின் கோப்ரா என பல படங்கள் கிடைத்தது.
மேலும் அந்தளவிற்கு இப்படம் அனைவரையும் கவர்ந்தது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கிட்டததட்ட 7 ஆண்டுகளுக்கு பின்னர் இதன் இரண்டாம் பாகத்தில் அருள்நிதி நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இதன் அறிவிப்பை “டிமான்டி காலனி” திரைப்படம் வெளியான (மே 22, 2015) 7 ஆண்டுகள் கழித்து அதே நாளில் இன்று இதன் இரண்டாம் பாகமான “டிமான்டி காலனி 2" படத்திற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மேலும் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்குனர் அஜய் ஞானமுத்து இப்படத்தை தயாரிக்க, அவரது இணை இயக்குனரான வெங்கி வேணுகோபால் இந்த படத்தினை இயக்குகிறார். ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
பிற செய்திகள்:
- சிறிய பட்ஜெட் படங்கள் தயாரிக்கும் இயக்குநர்களுக்கு வாய்ப்பு வழங்குவாரா உதயநிதி- கோரிக்கை வைத்த பிரபலம்
- அருள்நிதியின் அடுத்த படம் இது தான்-உறுதி செய்த பிரபல இயக்குநர்..!
- விக்ரம் படத்தின் ரன்னிங் டைம் பற்றி வெளியாகிய சூப்பர் ஹிட் தகவல்- அட இத்தனை நிமிடங்களா?
- அட்டகத்தி தினேஷின் J பேபி திரைப்பட டீசரில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஊர்வசி
- காட்டுப் பகுதிக்குள் ஆம்புலன்ஸின் உதவியோடு கடைசி கட்ட படப்பிடிப்பை ஆரம்பித்த விடுதலை படக்குழு
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!