தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அருண் விஜய். வாரிசு நடிகரான இவர் 'முறை மாப்பிள்ளை' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகியிருந்தார். அதனைத் தொடர்ந்து இன்றுவரை பல படங்களில் நடித்து வருகின்றார்.
அந்தவகையில் அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் 'யானை' என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. அதைத் தொடர்ந்து தமிழ் ராக்கர்ஸ் என்ற இணையத் தொடர் கடந்த வாரம் நேரடியாக சோனி லிவ் ஓ.டி.டி தளத்தில் வெளியிடப்பட்டது.
இவ்வாறாக தன்னுடைய நடிப்புத் திறமையை பல வழிகளிலும் வெளிப்படுத்தி வருகின்ற இவர் தற்போது GNR.குமரவேலன் இயக்கத்தில் 'சினம்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படமானது ஒரு காவல் துறை அதிகாரியின் வாழ்க்கை பின்னணியை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் உடைய படப்பிடிப்புக்கள் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கின. எனினும் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களினால் படத்தின் வேலைகள் யாவும் முடிவடைந்தும், படம் வெளியாகாமல் இருந்தது.
இந்த நிலையில் 'சினம்' திரைப்படத்தை எதிர்வரும் 16-ஆம் திகதி வெளியிடுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது. அதனால் படத்தை பிரபலபடுத்தும் பணியில் படக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அத்தகைய கோயம்புத்தூரில் இடம்பெற்ற ப்ரோமோஷன் நிகழ்வொன்றின் போது அருண் விஜய் தனது ரசிகர்களுடன் இணைந்து புகைப்படங்களை எடுத்திருக்கின்றார். இப்புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
Listen News!