தமிழ் திரையுலகில் முக்கிய நடிகர்களாக திகழ்ந்து வருபவர்கள் தான் அருண் விஜய் மற்றும் சிவகார்த்திகேயன்.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் மற்றும் அருண் விஜய் இரண்டு நடிகர்களுக்கும் இடையே எப்போதும் ஒரு சர்ச்சை உண்டு.இந்த சர்ச்சை கடந்த 2018ஆம் ஆண்டு ஏற்பட்டது.
அந்த சர்ச்சை அருண் விஜய் பதிவிட்ட ஒரு ட்விட்-ல் இருந்து தான் தொடங்கியது அது தற்போது வரையில் பேசப்பட்டு வருகிறது.
இதற்கு சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் தொடர்ந்து தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.அப்போதில் இருந்து சமூக வலைத்தளங்களில் இவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்து கொள்வது இல்லை, பொது இடங்களில் பேசிக்கொள்வதில்லை.
Happy birthday Thambi ❤️Enjoyed your performance in Oh my dog.. Keep going, best wishes for your studies and acting career 👏👏👍🤗 https://t.co/C0VIlb7ziN
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) May 9, 2022
இந்நிலையில் இன்று சிவகார்த்திகேயன் அருண் விஜய்யின் மகனுக்கு திடீரென பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்து இருந்தார். மேலும் அவர் சொன்ன அந்த வாழ்த்தை தொடர்ந்து சர்ச்சைகள் எல்லாம் உடைக்கப்பட்டு பெரியளவில் பேசப்பட்டது.
இதனை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயனின் பதிவிற்கு நன்றி தெரிவித்து நடிகர் அருண் விஜய் பதில் ட்விட் ஒன்றை போட்டுள்ளார். இந்த விடயம் தற்போது ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.
Thanks a lot for the wishes brother!!❤️ Really kind of you to wish Arnav.. will surely pass it on to him 🙏🏽 https://t.co/vvljqnlbj3
— ArunVijay (@arunvijayno1) May 9, 2022
Listen News!