• Sep 20 2024

திடீரென பலத்த காயங்களுடன் புகைப்படம் வெளியிட்ட அருண் விஜய்- பதறிப் போய் விசாரிக்கும் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வாரி நடிகராக அறிமுகமாகியிருந்தாலும் தனது இயல்பான நடிப்பினால் தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்திருக்கும் முக்கிய நடிகர் தான் அருண்விஜய். ஆரம்பத்தில் சுமாரான திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தற்பொழுது நல்ல படங்களை தேர்வு செய்து நடித்து வருகின்றார்.


மேலும் இவரது கெரியரில் பெரிய மார்க்கெட்டை உருவாக்கிக் கொடுத்த திரைப்படம் என்றால் அது என்னை அறிந்தால் தான் எனலாம்.இதனைத் தொடர்ந்து குற்றம் 23 படம் இவரை சிறந்த கதாநாயகனாக அறிமுகப்படுத்தியது.


அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் மாஃபியா - சேப்டர் 1. கார்த்திக் நரேன் இயக்கிய இந்தப் படத்தைத் தொடர்ந்து சினம் திரைக்கு வருகிறது. அதனைத் தொடர்ந்து அறிவழகனின் பார்டர் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர பாக்ஸர் என்ற படத்திலும், மூடர்கூடம் நவீன் இயக்கத்தில் அக்னிசிறகுகள் படத்திலும் அருண் விஜய் நடித்துள்ளார். இதில் அக்னிசிறகுகள் படத்தில் அருண் விஜய்யுடன், விஜய் ஆன்டணியும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் இவர் பலத்த காயங்களுக்கு உள்ளான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அவர் கூறியதாவது என்னுடைய அனைத்து கடினமான செயல்களுக்குப் பின்னாலும், திரையில் இதுபோன்ற காயங்கள் ஏராளமாக இருப்பதை நீங்கள் காண்பீர்கள்... ஆனால் இன்னும் என் சொந்த ஸ்டண்ட் செய்ய விரும்புகிறேன். அடுத்த படத்திற்காகக் காத்திருங்கள் என்றும் பதிவிட்டுள்ளார்.

இதனால் படப்பிடிப்பின் போது கவனமாக பார்த்து நடியுங்கள் என ரசிகர்கள் கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement