• Sep 20 2024

அருண் விஜய்யின் 'யானை' தமிழக ஷேர் மட்டும் இத்தனை கோடியா..? வாயை பிளந்த ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குநர் ஹரி - அருண் விஜய்யின் முதல் கூட்டணியில் அமைந்த படம் 'யானை'. இப்படத்தில் அருண் விஜய்யோடு இணைந்து ராமச்சந்திர ராஜு, பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி, ராஜேஷ், ராதிகா சரத்குமார், ஐஸ்வர்யா, அம்மு அபிராமி, யோகி பாபு என பல திரைப் பிரபலங்களும் முக்கியவேடங்களில் நடித்திருந்தனர்.

அத்தோடு இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசை அமைத்திருப்பதோடு படத்தொகுப்பை ஆண்டனியும் செய்திருந்தனர். மாஃபியா அத்தியாயம் ஒன்றுக்குப் பிறகு அருண் விஜய் மற்றும் பிரியா பவானிசங்கர் இணைந்து இரண்டாவது முறையாக இந்த படத்தில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதில் அருண் விஜய் கிராமத்து பையனாக நடித்திருக்கின்றார்.

கடந்த ஜூலை 1-ஆம் திகதி வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நேர்மையான விமர்சனங்களை பெற்றிருந்தது. எனினும் திரைக்கதை வழக்கம்போல இருப்பதாக ஒரு சிலர் விமர்சித்தும் இருந்தனர். மேலும் இந்தப்படமானாது ரூ.36.3 கோடிகளை வசூலாக பெற்று இருந்ததாக அதிகாரப்பூர்வமாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 'யானை' படத்தின் தமிழக ஷேர் குறித்த அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்னும் சில திரையரங்குகளை தக்க வைத்துள்ள இந்த படமானது தமிழகத்தில் மட்டும் 11 கோடி ரூபாய்க்கு மேல் ஷேர் செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாது தமிழகத்தில் 20 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளது. அத்தோடு உலகம் முழுவதும் இப்படத்தின் வசூலானது 25 கோடி ரூபாய் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

அருண் விஜய்யின் நடிப்பில் இதுவரை வெளிவந்த படங்களில் இப்படமானது சிறந்த படமாக அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாது இன்றுவரை ரசிகர்கள் இப்படத்திற்குத் தமது ஆதரவுகளை வழங்கி வருவதும் சிறப்பான ஒரு அம்சமாகும்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement