• Sep 20 2024

சூர்யாவை கத்தியால் குத்திய அரவிந்த்.. மாரி கொடுத்த அதிர்ச்சி - நடந்தது என்ன..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் மாரி சீரியல்.

இன்றைய எபிசோடில் ரவுடிகள் சூர்யாவை வைத்து கொளுத்திய குடிசையில் நெருப்பு எரிந்து கொண்டிருக்க சூர்யா உள்ளே இருப்பதை அறிந்த மாரி குடிசையின் உள்ளே வந்து சூர்யாவை காப்பாற்றி வெளியே அழைத்து வருகிறாள்.

அப்போது சூர்யா இதற்காகத்தான் இத்தனை நாள் பயந்து கொண்டிருந்தியா என கேட்க ஆமாம் என் கனவில் அரவிந்த் உங்களை கத்தியால் குத்துவது போன்று வந்ததை சொல்ல அதைக் கேட்டு சூர்யா அதிர்ச்சியாகிறான்.

அப்போது மாரி சூர்யாவை புத்துக்கோவிலுக்கு அழைத்து செல்ல அங்கு வரும் அரவிந்த் சூர்யாவை கத்தியால் குத்துகிறான். அத்தோடு  அரவிந்த் சூர்யாவை தள்ளிவிட்டு மாரியை தள்ளிவிட மாரி அருகில் உள்ள கோயிலில் குங்குமபூதி தட்டில் போய் விழுகிறாள்.

முகம் முழுவதும் குங்குமத்துடன் ஆக்ரோஷமாக சூலத்தை எடுக்க அதை பார்த்த அரவிந்த் பயந்தபடி ஓடுகிறான். இதன் பின்னர் மாரி கோயிலில் இருந்து மஞ்சள் எடுத்துக் கொண்டு வந்து சூர்யா உடம்பில் கட்டி வண்டியை பிடிக்க போகிறாள்.

அப்போது அங்கு விக்ரம் வர விக்கிரமிடம் விஷயத்தை சொல்லி ஜீப்பில் ஆஸ்பத்திரி கொண்டு போய் சேர்க்கின்றனர். அத்தோடு விக்ரம் வீட்டில் உள்ள ஹாசினிக்கு விஷயத்தை சொல்ல அனைவருக்கும் சூரியாவுக்கு அடிபட்ட விஷயம் தெரிய வருகிறது.

தாராவிற்கு மட்டும் அரவிந்த் மாட்டுனானா இல்லையா என்று தெரியாமல் இருக்க ஆஸ்பத்திரிக்கு வரும் அனைவரும் யார் சூர்யாவை கத்தியால் குத்தியது என்று கேட்க மாரி அமைதியா இருக்க இறுதியாக மாரி அரவிந்த் பெயரை சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

ஆனால் தாரா மாரி பொய் சொல்றா என்று மாரி மீது பழி போட மாரி இல்ல நான் சொல்றது உண்மை என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். இதனால் அடுத்து நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Advertisement

Advertisement