• Sep 20 2024

உருகி உருகி காதலித்த பெண்ணை விடுத்து... பணத்துக்காக சாயிஷாவை திருமணம் பண்ணிய ஆர்யா... உண்மையை உடைத்த பிரபலம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்த கொண்ட பிரபலங்கள் பலர் இருக்கின்றனர். ஜோதிகா-சூர்யா, பிரசன்னா – சினேகா, அஜித்-ஷாலினி என்று இப்படி சொல்லிகொண்டே போகலாம். அந்த வரிசையில் ஆர்யா – சாயிஷா ஜோடியும் உள்ளார்.


இவர்களுக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பின்னர் இருவரும் டெடி என்ற படத்தில் கணவன் மற்றும் மனைவியாக இணைந்து நடித்திருந்தனர். தொடர்ந்து இவர்களுக்கு கடந்த 2021-ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து சந்தோசமாக தமது குடும்ப வாழ்க்கையை முன்னெடுத்து வருகின்றனர்.


இந்நிலையில் எப்போதுமே பிரபலங்கள் குறித்து பல சர்ச்சை கருத்துக்களை கூறி வரும் பயில்வான் ரங்கநாதன் தற்போது ஆர்யா பற்றி யாருக்கும் தெரியாத விடயம் ஒன்றினைப் பகிர்ந்துள்ளார். 


அந்தவகையில் அவர் கூறுகையில் "தொலைக்காட்சியில் பணியாற்றிய ஒரு பெண் ஆர்யாவை உயிருக்குயிராக காதலித்தார். ஆனால் ஆர்யா அந்தப் பெண்ணினுடைய காதலை ஏற்க மறுத்துவிட்டார். அதற்கு முக்கிய காரணம் ஆர்யா நடிகை சாயிஷாவை காதலித்தமை தான்" என்றார்.


மேலும் "சாயிஷா சாதாரண ஒரு நடிகை அல்ல இந்திய கோடீஸ்வரர்களில் ஒருவர். அத்தோடு சாயிஷாவின் பெற்றோர்களும் பாலிவுட் பிரபலங்கள். எனவே சாயிஷாவை திருமணம் செய்தால்ரொம்ப வசதியான வாழ்க்கை வாழலாம் என்ற எண்ணத்தில் தான் ஆர்யா சாயிஷாவை திருமணம் செய்து கொண்டார்" எனவும் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். 

Advertisement

Advertisement