தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் ஆர்யா. இவர் தன்னுடன் கஜினிகாந்த் என்னும் படத்தில் நடித்த சாயிஷாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் இருவீட்டார் சம்மதத்துடனும் இஸ்லாமிய முறைப்படி நடந்தது.
தற்போது இந்த தம்பதியினருக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த பெண் குழந்தைக்கு ஆரியானா என பெயரிட்டனர். சமீபத்தில் குழந்தையின் புகைப்படத்தையும் ஆர்யா சாயிஷா தம்பதியர் வெளியிட்டனர்.ஆர்யா & சயிஷா தற்போது துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
அங்கு எடுத்த வீடியோக்கள் & புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாயிஷா பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் குழந்தை ஆரியானா & ஆர்யா மற்றும் குடும்பத்தினர் இடம்பெற்றுள்ளனர். மிராக்கிள் கார்டனில் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
டெடி, சார்பட்டா பரம்பரை மற்றும் கேப்டன் படங்களை தொடர்ந்து இயக்குநர் முத்தையா இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார், வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார், வீரமணி கலை இயக்கம் செய்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!