• Sep 20 2024

அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டர் என வடிவேலு சொன்னது போல என் வாழ்க்கையிலும் நடந்தது. ! மனம் திறந்தார் இறுகப்பற்று நடிகை அபர்ணதி !.

sarmiya / 11 months ago

Advertisement

Listen News!

இயக்குனர் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஸ்ரீ, விதார்த் என பல தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரகாஷ் பாபு, எஸ் ஆர் பிரபு, பி கோபிநாத் மற்றும் தங்க பிரபாகரன் இணைந்து 'ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' மற்றும் 'போடென்டியல் ஸ்டுடியோஸ்' என்ற தயாரிப்பு நிறுவனங்களின் தயாரிப்பில்  வெளிவந்த திரைப்படமாகும்.


இதில் அபர்ணதி குண்டு பெண்ணாக நடித்திருந்தார். இதற்காக இரண்டு வருடங்கள் முயற்சி செய்து தனது எடையை  ஏற்றி நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்து முடிக்கும் வரை வேறு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகவில்லை.  பட வாய்ப்புக்களும் கிடைக்கவில்லை. 


இந்நிலையில் இறுகப்பற்று படத்தில் பணியாற்றியவர்களுக்கு நேற்றைய தினம் விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்டு அபர்ணதி பேசும்போது, “இந்த படத்தில் நடித்ததற்காக முதலில் நானே எனக்கு நன்றி சொல்லிக் காெள்கிறேன். படம் பார்த்தவர்கள் எந்த குறையும் சொல்லவில்லை.தங்களுடைய உணர்வுகளை என்னுடன் பகிர்ந்து வருகின்றனர்.


இந்தப் படத்தின் மூலம் அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டர் என வடிவேலு சொன்னது போல என் வாழ்க்கையிலும் நடந்தது. நான் சினிமாவிற்காக முயற்சி செய்தபோது என்னுடைய தந்தையின் நண்பரின் மகன், சினிமாவிற்கு போய் நீ...என்ன 'கிழிக்க' போகிறாய் என்று கேட்டான். ஆனால் இன்றைக்கு துபாயில் இந்த படம் பார்ப்பதற்காக  டிக்கெட் வாங்கி 'கிழித்து' போட்டு தான் உள்ளே போய் படம் பார்த்தான்...

இப்போது தான் சினிமாவில் வெற்றியை பார்க்கிறேன். இந்தப் படத்தில் கிளைமாக்ஸில் நான் அழுதது நிஜமான  அழுகைதான். என்னடா டைரக்டர் இப்படி போட்டு வேலை வாங்குகிறாரே  என்று நினைத்ததால் வந்த அழுகை. இப்படத்தில் நடித்தது ஒரு சவாலாகவே இருந்தது என கூறினார்.



Advertisement

Advertisement