பிரபல தொலைக்காட்சி சேனலான ஜீ தமிழ் டிவியில் 'சரிகமப' என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி தற்போது சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ் சீசன் 3-ஐ வெற்றிகரமாக ஒளிபரப்பி வருகிறது. இதில் பல சிறுவர்களும் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில் குறித்த நிகழ்ச்சி ஆரம்பித்து இரண்டு வாரங்கள் கழித்து இலங்கையில் இருந்து அசானி என்கிற ஒரு பெண் கலந்து கொண்டு தனது பாடல்களால் மக்கள் மனதைக் கவர்ந்து வருகின்றார். இவர் பணம் இல்லாமையினால் தான் இந்தப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.
இவரின் ஏழ்மையைப் புரிந்து கொண்ட டிவி சேனல் இவருக்கு 2வாரங்கள் அந்நிகழ்ச்சியில் பாட வாய்ப்பளித்திருந்தனர். குறித்த 2வாரங்கள் கடந்து விட்ட நிலையில் தற்போது போட்டியாளர்களில் ஒருவராக அசானியும் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றார்.
இதனைத் தொடர்ந்து நடுவரும் பாடகருமான் ஸ்ரீநிவாசன் கூறுகையில் "அசானியினுடைய இந்த வெற்றிக்கு காரணம் அவரின் தன்னம்பிக்கை தான் எனவும், 3வாரங்கள் தாண்டியும் இந்த மேடையில் நீ நிற்கிறாய், அன்னைக்கு நீ தாமதமாக போட்டியில் கலந்து கொள்ள வந்தபோது உன்னை சேர்த்துக்கிட்டது சரியா, தப்பா என்று பல முறை யோசிச்சிருக்கோம்.
ஆனால் இப்போ சொல்லுறோம் உன்னை அன்னைக்கு சேர்த்திருக்காவிட்டால் நாங்க எவ்வளவோ பெரிய தப்புப் பண்ணியிருப்போம், உனக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்தது எங்களை மட்டுமில்லாமல் சரிகமப ஷோவையும் பெருமைப் படுத்திற்று" எனக் கூறிப் புகழ்கின்றார்.
அதுமட்டுமல்லாது "சரிகமப வின் பிரகாசமே இப்போ அசானி தான், சரிகமப விற்கு வந்ததுக்கு அசானிக்கு ரொம்ப தேங்க்ஸ்" எனவும் கூறி நன்றி தெரிவித்துள்ளார். மேலும் மற்றோர் நடுவர் கூறுகையில் "அசானி அங்க இருந்து வந்து இங்க பாட்டுப்பாடி, அதைப் பற்றிப் பாராளுமன்றத்தில் பேசி இருக்காங்க என்றால் அது கண்டிப்பாக கடவுள் எழுதின எழுத்துத்தான் என்கிறார்.
இவ்வாறாக அசானியை போட்டியாளர்களில் ஒருவராக தேர்ந்தெடுத்து நடுவர்கள் புகழ்ந்து கூறியமை ஆனது சமூக வலைத்தளங்களில் வைரலாக்கப்பட்டு வருகின்றது. எது எவ்வாறாயினும் அசானிக்கு பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
Listen News!