விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று 'பிக்பாஸ்'. இந்நிகழ்ச்சியானது ஏற்கெனவே 6 சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்டதுடன் இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஆனது கோலாகலமாக ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
மேலும் மொத்தம் 21 போட்டியாளர்களுடன் அட்டகாசமாக தொடங்கி வைக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியானது 10 வாரத்தை கடந்து ஒளிபரப்பாகின்றது. அத்தோடு ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில் ஆறாவது சீசனில் கடந்த வாரம் முதல் முறையாக டபுள் எலிமினேஷன் நடைபெற்றது. இதில் சனிக்கிழமை ராம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆயிஷா என இருவர் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து இந்த வாரம் யார் வெளியேறுவார் எனப் பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்நிலையில் இன்றைய நாளுக்குரிய 2ஆவது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. இதில் "மக்களிடத்தில் ரொம்பவும் சுவாரஷ்யமாக பார்க்கக் கூடிய 2பேரைக் கூறுமாறு கேட்கப்படுகின்றது. அதில் ஏடிகே அமுதவாணனின் பெயரைக் கூறுகின்றார். அதேபோல ஷிவின், ரச்சிதா ஆகியோரும் அமுதவாணன் பெயரைக் கூறுகின்றனர்.
அத்தோடு மைனா, தனலட்சுமி, ஷிவின் ஆகியோர் அசீமைக் கூறுகின்றனர். இதற்கு உடனே அசீம், அமுதவாணன் எழுந்து நின்று கையெடுத்துக் கும்பிட்டு ஹவுஸ்மேட்ஸ் க்கு நன்றி தெரிவிக்கின்றனர். அதுமட்டுமல்லாது விக்ரமனின் பெயர் இடம்பெறும் எனப் பலரும் எதிர்பார்த்த நிலையில் இதில் இவரின் பெயர் இடம்பெறாமையால் கம்மென்னு அமைதியாக உட்கார்ந்து இருக்கின்றார். இவ்வாறாக இன்றைய ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது.
இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!
Listen News!