• Sep 20 2024

ரகசியத்தை உடைத்த அசீம்...பிக்பாஸ் வீட்டுக்குள் வெடித்த சண்டை..நடந்தது என்ன..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 6 கடந்த அக்டோபர் மாதம் ஆரம்பமாகியது. எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த சீசனில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டு 11போட்டியாளர்களே உள்ளார்கள்.  இந்த சீசன் ஆரம்பித்ததில் இருந்து சில நாட்களிலேயே சண்டைகள், சர்ச்சைகள் ஆரம்பமானது. எனவே ரசிகர்கள் இந்த சீசனை ஆர்வமாக பார்க்க வருகின்றனர்.இந்நிலையில் 64வது எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்..

அசீம் கேமராவைப் பார்த்து பேசிட்டு இருக்கிறார்.இதை அமுதவாணன் பார்த்து விட்டு அமுதவாணன் அசீம் மாதிரி கலாய்க்கிறார்.எனக்கு கோடிக்கணக்கில் வெளியில் ஆட்கள் இருக்கிறார்கள் என அசீம் மறுபடியும் சொல்கிறார்.

இந்த இடத்தில் தான் நல்லா விளையாடுவதற்கான அந்த சீக்கிரெட்டை உடைத்துவிட்டார்.அதாவது வெளியில் இருந்து மக்கள் பார்க்கும் போது நீங்கள எல்லோரும் என்னை வெறுக்கிறீங்க..நான் உங்க எல்லோரையும் எதிர்த்து போராடுவதால் வெளியில் மக்கள் எனக்கு தான் ஆதரவு தருவாங்க எனக் கூறுகின்றார்.

அதற்கு அப்புறம் அந்த வகையில் இந்த வாரம் ஒவ்வொரு போட்டியாளரும் இரண்டு பேரை எவிக்சனுக்கு நாமினேட் செய்தனர். அதன்படி, மணிகண்டன், அசீம், விக்ரமன், ரச்சிதா ஆகியோர் சக போட்டியாளர்களால் குறிவைக்கப்பட்டுள்ளனர். 

அதனால், இந்த வாரம் போட்டி முதல் நாளில் இருந்தே சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

அதன் பிறகு ADK புறம் பேச ஆரம்பிக்கிறார்.அதாவது வேற யாரையும் பற்றி இல்லை..அது அசீம் பற்றி தான்.அதன் பிறகு கேப்டன் டாஸ்க் இடம்பெற்றது. இந்த வாரத்தின் தலைவராக மைனா நந்தினி தேர்வாகியும் உள்ளார்.

அதன் பிறகு ஷெரினுக்கும் தனலட்சுமிக்கும் பெரிய சண்டை ஒன்று வெடித்தது.அதாவது ஷெரின் தோசை ஊத்தித் தரச் சொல்ல தனம் ஓவர் ஆக்டிங் ஆக சண்டை பிடிக்கின்றார்.இவர்களோடு ஜனனியும் சேர்ந்து கொண்டு ஷெரினோடு சண்டை பிடிக்கின்றார்.

ஒவ்வொருத்தரா வந்து அந்த சண்டையை சமாதானப்படுத்தினார்.அதன் பிறகு ரச்சிதாவிற்கு கொடுக்கப்பட்ட கார்ட்டை எடுத்து பார்க்கும் போது ஜெயில் ப்ரீ என்று கொடுக்கப்பட்டுள்ளது.அதற்கு ரச்சிதா நான் ஜெயில்ல தான் இல்லையே எனக் கூறியதும் இனிமேல் ஜெயிலுக்கு போறதை அதை வைத்து தடுத்துக் கொள்ளலாம் எனக் கூறப்படுகின்றது.இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement