பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்து சண்டைக்கு குறைவில்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் 65ம் நாளில் நடந்தது என்ன என்று பார்ப்போம்.
அதாவது காலையிலேயே ஷிவின் மற்றும் தனலக்ஷ்மிக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதால் விக்ரமன் கிச்சன் டீமிலிருந்து வெளியேறி ஷிவின் குறித்து மைனா நந்தியினியிடம் புலம்பிக் கொண்டிருந்தார். அதனால் மைனா நந்தினியும் ஷிவினுக்கு அட்வைஸ்ட் பண்ண கடுப்பான ஷிவின் மீண்டும் விக்ரமனுடன் மோதலில் ஈடுபட்டார்.
இதனைத் தொடர்ந்து இந்த வாரத்திற்கான டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதாவது இந்த வாரத்திற்கான சொர்க்கமா..நரகமா டாஸ்க் நடந்து வருகிறது. இதற்காக வீட்டில் உள்ளவர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து உள்ளனர். கார்டன் ஏரியாவில் நடைபெறும் இந்த டாஸ்கிற்காக வீட்டில் சிறு கூண்டு வடிவில் ஜெயில் அமைக்கப்பட்டுள்ளது.
அதற்குள் நரகத்தைச் சேர்ந்தவர்கள் இருப்பார்கள். அவர்கள் அதிக நேரம் சைக்கிள் பேடலில் செய்பவர் சொர்க்கத்திற்கு வரலாம், அதேபோல குறுக்குவழியில் சிறிய கூண்டை திறந்து கொண்டும் சொர்க்கத்திற்கு செல்லலாம் என கூறப்பட்டுள்ளது.
இதனால் டாஸ்க் ஆரம்பித்த நேரத்திலிருந்து அசீம் ரூல்ஸை மீறி விளையாடிட்டு இருந்தார். இதனால் விக்ரமன் அசீமுக்கு புரிவைத்தார். ஆனால் அவர் கேட்பதாக இல்லை. தொடர்ந்து அமுதவாணனுக்கும் அசீமுக்கும் இடையில் அடிக்கடி மோதல் ஏற்பட்டது.இதுதவிர தனலக்ஷ்மி மற்றும் அமுதவாணனுக்கும் இடையிலும் சிறிய மோதல் ஏற்பட்டது.
சண்டை ஒரு புறம் இருந்தாலும் டாஸ்க்கும் சிறப்பாக நடைபெற்றது. மேலும் வீட்டின் வேலைகள் ஒழுங்காக நடக்க வேண்டும் என்பதற்காக கதிரவன் தான் நரகத்திற்கு வந்து விக்ரமனை சொர்க்கத்திற்கு அனுப்பி வைத்தார்.அதே போல 30 நிமிடம் சைக்கிள் ஓடி வெற்றி பெற்ற அசீம் சொர்க்கத்திற்கு செல்லாமல் நரகத்திலேயே இருந்து விடுகின்றேன் எனக் கூறி தனது விளையாட்டை விளையாடிட்டு இருந்தார். இவ்வாறாக இன்றைய எப்பிஷோட் முடிவடைந்ததைக் காணலாம்.
Listen News!