விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 6. கடந்த சீசன்களைப் போல இல்லாமல் இந்த சீசன் வித்தியாசமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.போட்டியாளர்களும் கடுமையாக மோதி விளையாடி வருகின்றனர்.
இந்த வார நாமினேஷன் பட்டியலில் அசீம், ஏடிகே, ஜனனி, கதிரவன், ராம், ஆயிஷா ஆகிய ஆறு போட்டியாளர்கள் இடம்பெற்று உள்ளனர்.இந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்பதால் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகவே காணப்படுகின்றது.
இதனடிப்படையில் குறைந்த வாக்குகளைப் பெற்றிருக்கும் ராம் மற்றும் ஆயிஷா ஆகியோரே பிக்பாஸ் வீட்டை விட்டு வெியேறுவார்கள் என்று கூறப்படுகின்றது.இது தவிர நிகழ்ச்சி ஆரம்பித்து 60 நாட்கள் ஆகியும் இன்னும் வைல்ட்காட் என்ட்ரியாக யாரும் இன்னும் உள்ளே செல்லவில்லை.
இந்நிலையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரமோ வெளியாகி உள்ளது.அதில் ஜனனி பேசிய விடயம் தப்பு என்கிற மாதிரி ராம் மற்றும் அமுதவாணன் கூறிக்கொண்டு இருக்க ஜனனி கூறுகின்றார்.அதாவது நீ எப்படி அறிவு இல்லை என்று கூறலாம் என அசீம் மற்றும் ஏ.டி.கே. கோபப்பட்டார்கள் என ராம் கூறினார்.அதாவது அசீம் கோபத்தில் வார்த்தை விட்டால் அது ஒன்றும் கிடையாதா.. என ஜனனி கேட்கின்றார்.பின் ஏ.டி.கே.யும் அப்பிடித்தான் எனக் கூற இன்றைய ப்ரமோ நிறைவடைகின்றது.
இதோ அந்த ப்ரமோ...
Listen News!