விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று 'பிக்பாஸ்'. 21 போட்டியாளர்களுடன் ஆரம்பமான இந்த நிகழ்ச்சியானது 10 வாரத்தை கடந்து ஒளிபரப்பாகின்றது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில் ஆறாவது சீசனில் கடந்த வாரம் முதல் முறையாக டபுள் எலிமினேஷன் நடைபெற்றது. இதில் சனிக்கிழமை ராம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆயிஷா என இருவர் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து இந்த வாரம் யார் வெளியேறுவார் எனப் பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.
விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கையில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில் சிலர் சொர்க்கவாசிகளாகவும், சிலர் நரகவாசிகளாகவும் உள்ளார்கள் என்று புதிய டாஸ்க் கொடுக்கப்படுகின்றது.ஏனைய டாஸ்க் போலவே இதுவும் சண்டை, கோபம், அழுகை என ரொம்பவும் சுவாரஸ்யமாக நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் இன்றைய நாளுக்குரிய மூன்றாவது ப்ரமோ வெளியாகி உள்ளது.நரகத்தில் இருக்கும் பேய்கள் எப்படியாவது சொர்கத்துக்கு செல்ல வேண்டும் என்பது தான் அந்த டாஸ்க். மேலும் அப்படி சென்றால் அவர்களுக்கு நாமினேஷன் பிரீ சோனுக்கு செல்ல முடியும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் மணிகண்டன், அமுதவாணன், ஏடிகே, ஜனனி என நால்வர் நாமினேஷன் பிரீ சோனுக்கு சென்றுள்ளனர்.
இவ்வாறுஇருக்கையில் அதற்கு விக்ரமன் தான் முதலில் கையை வைத்தேன் எனக் கூறும் போது அதற்குவிளக்கம் கொடுக்கின்றார் அசீம்.அதாவது நீங்க முதலில் வந்தீங்க ஆனால் முதலில் கையை வைத்தது ஜனனி தான் என்று அதற்கு தனலட்சுமியும் அப்படியே கூறி இருந்தார்.இவ்வாறாக மாறி மாறி யார் முதலில் வெளியேறியது என்று கதைத்துக் கொண்டே இருக்கின்றார்.இவர்கள் இருவரும் பேசியதால் அது ஜனனிக்கு கொடுக்கப்படுகின்றது.இனால் இந்த வாரம் கமல் வந்து என்ன சொல்லப்போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
இதோ அந்த ப்ரமோ...
Listen News!