• Sep 20 2024

பச்சோந்தியாய் மாறிய அசீம்... நேற்றொரு முகம் இன்றொரு முகமா... வெளுத்து வாங்கும் நெட்டிசன்ஸ்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது நாளுக்கு நாள் மோதல், பொய், புரளி, சிரிப்பு, அழுகை எனப் பல விதமான உணர்ச்சிகளுடன் நகர்ந்து சென்ற வண்ணமே இருக்கின்றது. அதுமட்டுமல்லாது ஏனைய சீசன்களை விட இந்த சீசனானது பரப்பரப்பிற்கு பஞ்சிமில்லாமல் சென்று கொண்டிருக்கின்றது.

அதற்கு முக்கிய காரணமே அங்குள்ள போட்டியாளர்கள் தான். இதில் விக்ரமன், அசீம், தனலட்சுமி போன்றோரை குறிப்பிட்டு கூற முடியும். அதிலும் குறிப்பாக அசீமின் உண்மை முகத்தை யாராலுமே கண்டு பிடிக்க முடியாது. 


அதாவது பிக்பாஸ் வீட்டில் 2 வாரம் வில்லன், 2 வாரம் நல்லவன், மீண்டும் வில்லத்தனம் என மாறிக் கொண்டிருக்கின்றது. அதுமட்டுமல்லாது மாலையில் விக்ரமனுடன் மீண்டும் நட்புக்கரம், இரவில் புறம் பேசுவது என தன்னுடைய நடவடிக்கையை தினம் தினம் மாற்றிய வண்ணமே இருக்கின்றார். இதனால் கோபமடைந்து பச்சோந்தி கெட்டது போங்க எனக் கூறி அசீமை நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

ஆனாலும் அசீமின் நடத்தை ஆனது தற்போது மிக மோசமாக மாறியுள்ளது. ஏனெனில் 2 வாரத்திற்கு ஒருமுறை நல்லவன் கெட்டவனாக மாறுகிறார் என்றால் இவரின் உண்மையான இயல்பு என்ன என வீட்டில் உள்ளவர்களே விமர்சிக்கின்றனர். மேலும் இடையில் அசீம் மாறியதால் அவர் திருந்தி விட்டார் என நினைத்து அவருடன் நெருக்கம் காட்டிய விக்ரமன் நொந்து நூலாகி போனார். 

அதாவது என்ன மனிதர் இவர் சக மனிதனை கேவலமாக பேசுகிறவர் என விக்ரமன் நொந்துபோய் சொன்னார். அத்தோடு ஏடிகே அசீமின் நெருங்கிய நண்பராக இருந்தவர் அவரையும் கடுமையாக பேசி அவரும் அசீமை வெறுத்துப்போனார்.


இந்நிலையில் டாஸ்க் எல்லாம் முடிந்தவுடன் மாலை நேரம் கையில் இரண்டு டீ கோப்பைகளுடன் வந்து பிரதர் டீ குடிங்கன்னு விக்ரமனிடம் கொடுக்க அவர் வேண்டாம்னு மறுக்க, பிடிங்க பிரதர்னு கெஞ்ச ஓவனில் வைத்துவிடுங்கள் நான் எடுத்துக்கொள்கிறேன்னு விக்ரமன் அவரைத் தவிர்த்து விட்டார். 

இதனைப் பார்த்த ரசிகர்கள் மட்டுமல்லாது சக போட்டியாளர்களும் அடடே சனிக்கிழமை வருவதால் சமாதானமா என நினைத்து நமுட்டு சிரிப்பு சிரித்த நிலையில், மறுபடியும் நள்ளிரவில் அமுதவாணன் - ஜனனி யுடன் இணைந்து "விக்ரமன் அவன் அப்படி இப்படி, என் கிட்ட இப்படி பேசினான் அப்படி பேசினான்" என ஒருமையில் பேசிக்கொண்டிருந்தார். அவருடன் இணைந்து தனலட்சுமியும் புறம் பேசிக் கொண்டிருந்தார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் செம கடுப்பாகி உள்ளனர். அசீமை எப்படி ஆவது கமல் சார் தட்டிக் கேட்க வேண்டும் எனக் கூறி வருகின்றனர். 

Advertisement

Advertisement