ஜீ தமிழில் 'சரிகமப' என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி தற்போது சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ் சீசன் 3-ஐ வெற்றிகரமாக ஒளிபரப்பி வருகிறது.
குறித்த நிகழ்ச்சி ஆரம்பித்து இரண்டு வாரங்கள் கழித்து இலங்கையில் இருந்து அசாணி என்கிற ஒரு பெண் கலந்து கொண்டு தனது பாடல்களால் மக்கள் மனதைக் கவர்ந்து வருகின்றார். மேலும் அந்த சிறுமி பணம் இல்லாமையினால் தான் தாமதமாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் என்ற தகவலும் பலருக்கும் இவர் மேல் ஒரு ஈர்ப்பினை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படியான நிலையில் இந்த வாரம் சரிகமபவில் One on One Round நடைபெறுகின்றது. இதனால் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் சிறப்பாக பாடல்களைப் பாடி வருகின்றனர்.
இந்த நிலையில் ஈழத்துச் சிறுமி அசாணி " ஆட்டமா தேர் ஓட்டமா " என்ற பாடலைப் பாடி ஒட்டுமொத்த அரங்கத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். அதுமட்டுமல்லாது நடுவர்களும் இவரது பாடலை பார்த்து பாராட்டுகின்றனர். விசில் சத்தமும் கைதட்டும் பறக்க அருமையாக பாடலை பாடியுள்ளார் அஷானி.
Asanni On Fire...!!!🔥
Saregamapa Lil Champs | One on One Round | Saturday and Sunday at 7pm.#SaregamapaLilChamps3 #SaregamapaLilChamps #Asanni #ZeeTamil pic.twitter.com/JVtRRXYQkf
Listen News!