விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூது கவ்வும் படத்தின் மூலம் அறிமுகமானவர் அசோக் செல்வன். இதனை அடுத்து சோலோ ஹீரோவாக தெகிடி படம் அவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது.
பின்னர் ஓ மை கடவுளே, சில நேரங்களில் சில மனிதர்கள், நித்தம் ஒரு வானம் என அவரது படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.குறிப்பாக கடைசியாக சரத்குமாருடன் இணைந்து நடித்த போர் தொழில் படம் மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
இந்த நிலையில் நடிகர் அசோக் செல்வன், நடிகர் அருண் பாண்டியனின் மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியனை திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.
அதன்படி இன்றைய தினம் இவர்களின் திருமணம் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இது குறித் புகைப்படங்களை ரம்யா பாண்டியன் தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!