• Sep 20 2024

அடுக்கடுக்காய் கேள்வி கேட்கும் பாக்கியா; கோபி சொன்ன வார்த்தை – இன்றைய எபிசோடு அப்டேட்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் ஹிட்டாக ஓடிக்கொண்டு இருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.இத் தொடர் தற்போது விறுவிறுப்புக்கட்டத்தை நோக்கி நகருகின்றது.இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்.

பாக்கியா கோர்ட்டில் இருந்து வந்த நோட்டீசை எடுத்துக் கொண்டு கீழே வர என்ன இது என கேட்க கோர்ட்டில் இருந்து வந்தது இன்னைக்கு கோர்ட்டுக்கு போகணும் என்று கூறுகிறார். அதெல்லாம் ஒன்னும் போகத் தேவையில்லை என ஈஸ்வரி கூறுகிறார். மேலும் அந்த நோட்டீசை கிழித்து போட சொல்கிறார்.

செழியன் இனியா என எல்லோரும் அதெல்லாம் ஒன்றும் போக வேண்டாம் அதுக்கு போகணும்னு அவசியம் இல்லை என சொல்கிறார். இல்லை அத்தை அவர் கேட்டார் இல்ல ஆசைப்பட்டு கேட்டது செய்யறது தானே பொண்டாட்டியோட வேலை.

மேலும் அவர் ஆசைப்பட்டு கேட்டது கொடுக்கணும் இல்ல என சொல்கிறார். கோபி எல்லாத்தையும் மறந்துட்டு இந்த வாழ்க்கையில வாழ்வேனு உன்கிட்ட சொன்னான் தானே. உன் கிட்ட வந்து செஞ்சி தப்புக்கு மன்னிப்பு கேட்டான் தானே என ஈஸ்வரி கேட்க பாக்யா மன்னிப்பு கேட்டீங்களா என கோபி பாட்டு கேட்க கோபி பேசாமல் நிற்கிறார்.

அதன் பிறகு செழியன் நீங்க என்னமா சீரியல் சினிமால வர பஞ்ச் டயலாக் மாதிரி பேசிட்டு இருக்கீங்க என சொல்ல வாழ்க்கையில் உன்னை விட அதிக அனுபவம் எனக்கு இருக்கு இத பத்தி நான் பேசுகிறேன் நீ அமைதியா இரு என கூறுகிறார்.

இதன் பிறகு தன்னுடைய மாமனார் இடம் நான் உங்களை எனக்கும் மாமனாரை பார்த்ததில்லை என்னுடைய அப்பாவை தான் பார்க்கிறேன். நான் மரியாதையோடு வாழனும்னு நினைக்கிறேன். இனி சகிச்சுக்கிட்டு இந்த வாழ்க்கை வாழறதுக்கு செத்துப் போகலாம். என்னுடைய முடிவு அல்ல நீங்க குறுக்க நிக்க மாட்டேங்குது நான் நம்புகிறேன் என சொல்கின்றார். நான் என்னுடைய பிள்ளைகளுக்காக வாழனும்னு நினைக்கிறேன் என சொல்கிறார்.

ஈஸ்வரி இனி அவ எந்த தப்பும் பண்ண மாட்டான் என சொல்கிறார். நீ பிடிவாதமா இருந்தா நான் உன்கிட்ட பேசமாட்டேன் என சொல்ல பிடிக்காத வாழ்க்கையில அவர் இருக்க சொல்லி ஏன் கட்டாயப்படுத்துறீங்க.? என பாக்கியா கேட்கிறார். பத்து மணிக்கு தானே கோர்ட்ல இருக்கணும் எழில் இப்பொழுது கிளம்பினால் சரியா இருக்குமா என பாக்கியா கேட்கிறார்.

அதன் பின்னர் கோபி என்ன திமிர் காட்டுறியா? பழிக்கு பழியா என கேட்கிறார். அதெல்லாம் இல்லை இந்த பிடிக்காத வாழ்க்கையில் இருந்து விலகலாம் என முடிவெடுத்து இருக்கேன் என கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement