சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல ஹிட் சீரியல்களில் ஒன்றுதான் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலானது ரசிகர்களின் விறுவிறுப்பைத் தூண்டியவாறு அதிரடித் திருப்பங்களுடன் நகர்ந்த வண்ணம் இருக்கின்றது. இந்நிலையில் நேற்றைய எபிசோட்டில் என்ன நடந்துள்ளது என்பதை பார்ப்போம்.
அந்தவகையில் "இது எல்லாமே குணசேகரன் உடைய பிளான் தான். ஜீவானந்தம் குணசேகரனின் உடைய ஆள் தான், இதனால் தான் நாம போன் பண்ணும் போது ஜீவானந்தம் எடுக்கவில்லை. அவர் சொன்ன கவுண்ட் டவுன் உடைய அர்த்தம் இப்போ உங்க எல்லோருக்குமே புரியுதா..? குணசேகரனின் கணக்கு முடியவும் ஜீவானந்தம் உள்ளே வரவும் சரியாக இருந்தது அல்லவா. இனிமேல் சொத்து முழுவதும் குணசேகரன் கையை விட்டு போய் விடும்" எனக் கூறுகின்றார் ஈஸ்வரி.
பதிலுக்கு ஜனனி "இல்லை இதை நான் ஒருபோதும் நடக்க விடமாட்டேன். அவரை ஜெயிக்க நான் கடைசி வரைக்கும் விடமாட்டேன். இது எல்லாவற்றுக்கும் எப்படியாவது ஒரு முடிவு தெரியணும்" என்று கூறி சக்தியை இழுத்துக் கொண்டு புறப்படுகின்றார். இவர்களையடுத்து குணசேகரன், ஞானம், ஆடிட்டர், கதிர் ஆகியோரும் கம்பெனிக்கு செல்கிறார்கள்.
அப்போது குணசேகரன் "யாரு அந்த ஜீவானந்தம். கஷ்டப்பட்டு நான் சம்பாதிச்ச சொத்த எல்லாம் எவனோ ஒருத்தன் கிட்ட கொடுத்துடுவேனா" எனப் புலம்புகின்றார். பதிலுக்கு ஞானம் "அப்படியெல்லாம் நடக்க விட மாட்டோம் நீங்க கவலைப்படாதீங்க. இந்த ஆளு தான் ஏதோ உளறாரு" என ஆறுதல் கூறுகின்றார்.
அதற்கு ஆடிட்டர் "நான் நல்ல விசாரிச்சிட்டு தான் உங்களுக்கு சொல்றேன், உங்க அப்பத்தா அவருக்கு ஏதோ ஒரு வகையில உரிமையை எழுதி கொடுத்து இருக்காங்க, ஜனனி அன்னைக்கே இந்த சொத்து எதுவும் உனக்கு வராது என சொன்னாள், எல்லாத்துக்கும் அவள் தான் காரணம், அவளை ஒரு வழி பண்ணியே ஆக வேண்டும். அவளுக்கும் இதற்கும் ஏதோ சம்பந்தம் இருக்கு என்கிறார்.
இதற்கு "அவளை பிறகு பார்த்துக்கலாம் முதலில் அந்த ஜீவானந்தத்தை வெளியில் விரட்டணும். அப்பத்தா தான் டபுள் கேம் ஆடியிருக்கு அது கழுத்தை புடிச்சு நசுக்கணும்" எனப் புலம்பிக் கொண்டே செல்கின்றார்கள். மறுபுறம் கம்பெனியில் ஜீவானந்தம் ஆட்களுக்கும், குணசேகரன் தம்பிகளுக்கும் மோதல் நடக்கிறது. உடனே அங்கு வந்த ஜனனி அவர்களைத் தடுத்து நிறுத்துகின்றார்.
ஜனனியைப் பார்த்த குணசேகரன் "ஏய் களவாணி வந்துட்டியா, நீ தானே எல்லாத்துக்கும் காரணம். எல்லாம் பிளான் பண்ணி தான் நடிக்கிற" என கோபத்தில் கொந்தளிக்கின்றார். பதிலுக்கு ஜனனி "ஜீவானந்தம் உங்களுடைய ஆள் தானே அதனால் தானே அவனை வைத்து அப்பத்தாவின் கைரேகையை எடுக்க சொல்லி இருக்கீங்க. இங்க பாருங்க" என புட்டேஜில் இருக்கும் ஜீவானந்தம் போட்டோ ஆதாரத்தைக் காட்டுகிறாள் ஜனனி.
ஜனனி காட்டியத்தைப் பார்த்த குணசேகரன் "இவன் யாருன்னு எங்களுக்கு தெரியாது. என்ன பிரச்சனையை திசை திருப்புரியா" என மிரட்டுகின்றார். அந்தசமயத்தில் அங்கே வந்த ஃபர்ஹானா "இங்க நின்று கொண்டு யாரும் சத்தம் போடக்கூடாது எல்லாரும் வெளியே செல்லுங்கள். நாங்கள் இந்த கம்பெனியை சட்டப்படி வங்கியுள்ளோம்" என்கிறாள்.
மேலும் மரியாதையா பேசுங்க என்றதும் கதிர் அவளை அடிக்க செல்ல ஃபர்ஹானா அவனை தடுத்து கைகளை முறுக்கி திருப்பி அடிக்கிறாள். பின்னர் ஜனனி வந்து "நீங்க தானே அன்னைக்கு வீட்டுக்கு வந்து அப்பத்தா கைரேகை எடுத்துட்டு போனது. உங்களோட வந்த ஆள் எங்க? அப்பத்தா கைரேகையை வைச்சு பித்தலாட்டம் செய்ரீங்க. இது சட்டப்படி செல்லாது மரியாதையா வெளியே போங்க" எனக் கூறிக் கத்துகின்றார்.
பதிலுக்கு ஃபர்ஹானா "அமைதியா பேசினால் ஜீவானந்தத்தை சந்திக்கலாம்" என்கிறாள். மேலும் "நீங்கள் மட்டும் வாங்க ஆனா இவன் வரக்கூடாது" என கதிரை உள்ளே வர அனுமதிக்கவில்லை. பின்னர் "தோழர் மீட்டிங்கில் இருக்கிறார் வெயிட் பண்ணுங்க" என சொல்லிவிட்டு செல்கிறாள் ஃபர்ஹானா.
மறுபுறம் குணசேகரன் இப்பவும் இது எல்லாம் ஜனனியின் சதி வேலை தான் என நம்புகிறார். சிறிது நேரத்தின் பின்னர் பர்ஹானா வந்து வாங்க தோழர் உங்களை அழைக்கிறார் என சொல்ல குணசேகரன் ஜனனியை முன்னே போக சொல்கிறார். இவ்வாறாக இந்த எபிசோட் அமைந்துள்ளது.
Listen News!