சினிமாவில் வாய்ப்புக் கிடைக்க வேண்டும் என அலைந்து திருந்து பின்னர் பல தடைகள், மற்றும் அவமானங்கள் என்பவற்றை கடந்து வந்து தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவரே நடிகை ரவீனா தாஹா. நடிப்பில் தீவிர ஆசை கொண்ட இவர் நடிப்புக்கு வாய்ப்புக் கேட்டு பல திசைகளில் ஓடி அலைந்திருக்கிறார். ஆனால் அவரது முகம் சீனர்களின் தோற்றத்தில் இருக்கிறது என்று சொல்லி பலரும் நிராகரித்ததாக சொல்லப்படுகிறது.
நடிகை ரவீனா தாஹா சினிமாவில் முதலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். மேலும் ஜில்லா திரைப்படத்தில் நடித்திருந்தார். அதாவது ஒரு கலவர காட்சியில் மாடியிலிருந்து கீழே விழும் பள்ளி மாணவி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு சினிமாவில் நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது.
இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து சினிமாவில் குழந்தை நட்சத்திரமாகவே நடித்து வந்த இவர் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான 'ராட்சசன்' என்ற திரைப் படத்தில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார். மேலும் இந்த திரைப்படத்தில் ஆசிரியர் ஒருவரின் இச்சைக்கு ஆளாகும் பெண்ணாக தன்னுடைய தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய முகத்தை மென்மேலும் பதிய வைத்தார்.
முன்னர் கூறியது போன்றே இவர் "பட வாய்ப்புக்காக வேண்டி ஆடிஷனுக்கு செல்லும் போதெல்லாம் என்னை சைனா கார பொண்ணு மாதிரி இருக்க என்று கூறி வாய்ப்புகளை தட்டிக் கழித்தனர்" என்றும் தன்னுடைய வேதனையை ஒரு முறை பேட்டி ஒன்றின் மூலம் மன வருத்தத்துடன் கூறியிருந்தார்.
மேலும் விஜய்யின் தீவிர ரசிகையான ரவீனா விஜயின் 'ஜில்லா, புலி' உள்ளிட்ட படங்களிலும் 'பேய்கள் ஜாக்கிரதை, நாகேஷ் திரையரங்கம்' உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார். அவற்றை தொடர்ந்து தற்போது விஜய் டீவியின் 'மெளன ராகம்' என்ற சீரியலில் சக்தி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.
இவ்வாறாக தனது நடிப்பினை திறம்பட வெளிப்படுத்தி வருகின்ற இவர் சமீபகாலமாக படு கவர்ச்சிக்கு தாவி இருக்கின்றார். அந்த வகையில் கவர்ச்சியான உடைகளை அணிந்து தற்போதும் புகைப்படங்களை பதிவிட்டிருக்கின்றார். இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரை ஜொள்ளு விட்டு வருகின்றனர்.
Listen News!