தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக வலம் வரும் அதர்வா தற்பொழுது இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் பிரசாத் லேபில் லைக்கா தயாரிப்பில் பட்டத்து அரசன்" என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்தப்படம் இந்த மாதம் 25ம் திகதி வெளியாகவுள்ளது.
இப்படத்தில் ராஜ்கிரண், ஹாசிக்கா ரங்கனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதனால் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ந்தது.அதில் நடிகர்கள் அதர்வா,ராஜ்கிரண், ஹாசிக்கா,சிங்கம்புலி,ஜெய பிரகாஷ், ஆர்.கே சுரேஷ் பாடலாசிரியர் விவேகா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
இதில் பேசிய நடிகர் சிங்கம்புலி கூறுகையில் , ‘நடிகர் விமலுடன் பேசும்போது சரிபாதி நேரம் இயக்குநர் சற்குணம் பற்றி பேசுவேன். இவருடன் பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய ஆசை, பணத்திற்காக அல்ல நல்ல இயக்குநர் என்பதால், அந்த வாய்ப்பு இந்த படத்தில் அமைந்தது. 30 நாட்கள் தஞ்சாவூர் செல்ல வேண்டும் என்றனர் உடனே சரி என புறப்பட்டோம்.ராஜ்கிரண் வந்ததும் தான் படம் வேறு ஒரு தளத்திற்கு சென்றது.
ராஜ் கிரண் எப்போதும் தன்னுடைய கதாபாத்திரத்திலேயே இருப்பார். நாங்கள் தின்னிபயலாக சாப்பிட்டுக்கொண்டே இருந்தோம்,தூரத்தில் இருந்து பார்க்கையில் படத்தை தூக்கி நிறுத்தி விடுவார்கள் என்பதைபோல தெரியும் ஆனால் அப்படி இல்லை என காமெடியாக பேசினார்.
92 காலங்களில் ஒரு கதையை எடுத்துக்கொண்டு பல கதாநாயகர்களிடம் சென்றோம் அதில் மொட்டையடிக்க வேண்டும் என்பதால் நிராகரித்தனர் ஆனால் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து உடனே நடிக்கிறேன் என்றவர் தான் அதர்வாவின் அப்பா முரளி அப்படி ஒரு மனிதர், இப்படி ஒரு நல்ல மனிதரின் மகன் மிகப்பெரிய நாயகனாக வரவேண்டும் என்பது எனது ஆசை என்றார்.
மேலும் பாக்கு போடாத,சிகிரெட் பிடிக்காத, பார்ட்டிக்கு சென்றதால் தலைவலி என்று கூறாத ஒரு நல்ல நடிகர் அதர்வா தான்.’ என்று பெருமையாக கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!