பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியானது ஆரம்பிக்கப்பட்டு தற்பொழுது 65 நாட்களுக்கு மேலாக கடந்துள்ளது.அத்தோடு கடந்த வாரம் டபுள் எவிக்ஷ்சன் நடைபெற்றது.அதன்படி ராம் மற்றும் ஆயிஷா ஆகியோர் வெளியேறிச் சென்றனர்.
அந்த வகையில் இந்த வாரம் சொர்க்கமா நரகமா என்னும் டாஸ்க் நடைபெற்றது. அதில் போட்டியாளர்கள் கடுமையாக விளையாடி வந்தனர். குறிப்பாக ஜனனி விக்ரமனை ஏமாற்றிய விடயம் ரசிகர்களை பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கியது.
இதற்காக கமல்ஹாசன் இன்றைய தினம் குறும்படம் எல்லாம் போட்டுக்காட்டவுள்ளார்.இந்த நிலையில் இந்த வாரம் ஏடிகே தான் வெளியேறுவார் என்று கடந்த சில தினங்களாக தகவல் பரவி வந்தது.
தற்போது ஞாயிற்றுக்கிழமை எபிசோடு ஷூட்டிங் முடிந்திருக்கிறது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக வேறொரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.வாக்குகள் அடிப்படையில் ஜனனி தான் இந்த வாரம் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.
ஆரம்பத்தில் இருந்தே அவர் சரியாக விளையாடுவதில்லை என விமர்சிக்கப்பட்டு வந்தது. இலங்கை பெண் என்பதால் தான் இன்னும் ஷோவில் விஜய் டிவி வைத்திருக்கிறது என்றெல்லாம் ட்ரோல் செய்தார்கள்.இந்த நிலையில் தான் அவர் வெளியேற்றப்பட்டு இருக்கிறார். இதனால் ஜனனி ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!