• Sep 20 2024

போலீஸ் அதிகாரி கார் மீது தாக்குதல்: பிரபல நடிகை மீது வழக்கு

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஷாலின் வீரமே வாகை சூடும் படத்தில் நடித்து இருந்தவர் டிம்பிள் ஹயாதி. அவர் தெலுங்கு திரையுலகில்  கவர்ச்சி நடிகையாக வலம் வருகிறார்.

அவர் தற்போது ஹைதராபாத்தில் ஒரு அபார்ட்மென்டில் கணவருடன் வசித்து வருகிறார். எனினும்  அதே அபார்ட்மெண்டில் தான் மாநகர போக்குவரத்து காவல் ஆணையர் ராகுல் ஹெக்டே என்பவரும் வசித்து வருகிறார்.

டிம்பில் ஹயாதிக்கும் காவல் ஆணையர் ராகுலுக்கும் பார்க்கிங் இடம் தொடர்பாக பிரச்சனை இருந்து உள்ளது.


அத்தோடு ஒரு நாள் டிம்பிள் ஹயாதி அவர் காரை நிறுத்த வந்த போது அங்கு ராகுலின் கார் இருப்பதை பார்த்து கடும் கோபமாகி இருக்கிறார். ஹயாதியின் கணவர் காரை வைத்து அந்த காரை இடித்து இருக்கிறார். மேலும் நடிகையும் காலால் காரை உதைத்து கத்தி உள்ளார்.

இது பற்றி போலீஸ் வழக்கு பதிவு செய்து உள்ளனர். விசாரணைக்காக டிம்பில் ஹயாத்தி அவரது வழக்கறிஞர் உடன் ஸ்டேஷனுக்கு வந்திருக்கிறார். 


Advertisement

Advertisement