தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பில் கடைசியாக வெளியான 'டாக்டர், டான்' ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. அத்தோடு பாக்ஸ் ஆபிஸிலும் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. இதனையடுத்து இவரின் நடிப்பில் 'பிரின்ஸ்' படம் தீபாவளியை முன்னிட்டு வெளியானது.
இதனைத் தொடர்ந்து 'இன்று நேற்று நாளை' பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நடித்துள்ள படம் 'அயலான்'. இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக 'அயலான்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வந்தது. இருப்பினும் கொரோனா லாக்டவுன் காரணமாக பலமுறை இதன் படப்பிடிப்பு தடைபட்டது. எது எவ்வாறாயினும் இந்தியாவில் உருவாகும் முதல் ஏலியன், சயின்ஸ் ஃபிக்சன் மற்றும் கிராபிக்ஸ் படமாக அயலான் இருக்கும் என படக்குழுவினர் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தப்படத்தில் ‘அவதார்’ படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்கள் சிலர் இணைந்து உள்ளதாக தற்போது தகவல் ஒன்று வெளியாகி இருக்கின்றது.
இதனை அறிந்த ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனராம். அந்தவகையில் 'அயலான்' படத்தினை அடுத்தாண்டு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
Listen News!