உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் பலரையும் வியக்க வைத்த திரைப்படம் என்றால் அது 'அவதார்' தான். அதாவது ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் படத்தின் முதல் பாகம் 2009 டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் உறைய வைத்தது.
அதுமட்டுமல்லாது இப்படத்தில் இடம்பெற்று இருந்த பண்டோரா கற்பனை உலகம் கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. அத்தோடு இப்படம் வசூலிலும் சாதனை நிகழ்த்தியது. மேலும் 3 ஆஸ்கார் விருதுகளையும் வென்றிருக்கின்றது.
இதனைத் தொடர்ந்து 13 ஆண்டுகளுக்கு பிறகு அவதார் படத்தின் இரண்டாம் பாகம் 'அவதார் தி வே ஆப் வாட்டர்' என்ற பெயரில் தயாராகி ஆங்கிலம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்பட உலகம் முழுவதும் 160 மொழிகளில் நேற்றைய தினம் வெளியானது.
இந்த நிலையில் தான் அவதார் 2 படமானது தியேட்டரில் திரையிடுவதற்கு முன்பே இணையதளங்களில் திருட்டுத்தனமாக கசிந்துள்ளதாக கூறப்படுகின்றது. அத்தோடு இதனை பலரும் பதிவிறக்கம் செய்து பார்த்தனர்.
மேலும் ரூ.2 ஆயிரம் கோடி செலவில் எடுத்த இப்படத்தை திருட்டு இணையதளத்தில் பலரும் இலவசமாக பார்த்ததால் படக்குழுவினர் அதிர்ச்சியாகி உள்ளனர். இதன் காரணமாக இப்படத்தின் வசூல் பாதிக்கப்படும் என்ற அச்சம் தற்போது நிலவி வருவதாக கூறப்படுகின்றது.
Listen News!