• Sep 20 2024

Ayalaan Release:- வேதனை நிறைந்த கதை இருக்கும்... சிவகார்த்திகேயன் டுவிட் பதிவு... என்ன இப்படி சொல்லிட்டாரு...

subiththira / 8 months ago

Advertisement

Listen News!

சிவகார்த்திகேயனின் "அயலான்" திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. இந்த திரைப்படம் தொடர்பாக நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார். 


அயலான் திரைப்படம் தொடர்பாக ரசிகர்கள் நல்லவிமர்சனங்களை தெரிவித்துவருகின்றனர் . திரைப்படம் சூப்பராக உள்ளது, குடும்பத்தினருடன் பார்க்கலாம், சிறுவர்களுக்கு அதிகம் பிடிக்கும். காமெடி, நடனம், பாடல் எல்லாமே நல்லா இருக்கு, சிவகார்த்திகேயன் நல்லா நடிச்சி இருக்காரு ,வேற லெவல் படம் என ரசிகர்கள் பலவாறு நல்ல விமர்சனங்களையே தெரிவிக்கின்றனர்.   


இந்நிலையில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் "ஒவ்வொரு வெற்றிகரமான மனிதனுக்கும் ஒரு வேதனையான கதை இருக்கும். ஒவ்வொரு வலி நிறைந்த கதைக்கும் வெற்றிகரமான முடிவு உண்டு. வலியை ஏற்றுக்கொண்டு வெற்றிக்கு தயாராகுங்கள். உங்களுக்கு அருகிலுள்ள பெரிய திரைகளுக்கு இன்று அயலான் ரிலீஸ் இந்த பொங்கலுக்கு உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இந்த பொழுதுபோக்கு அனுபவத்தை அனுபவிக்கவும் என்று குறிப்பிட்டுள்ளார். 

இதோ அந்த டுவிட் பதிவு...

   

Advertisement

Advertisement