தமிழ் சினிமாவில் 'இன்று நேற்று நாளை' என்ற படத்தினை இயக்கிய பிரபல இயக்குநரான ரவிக்குமார் அடுத்து சிவகார்த்திகேயனுடன் கூட்டணி அமைத்துள்ளார். அதாவது 2018-ஆம் ஆண்டு இவரின் இயக்கத்தில் 'அயலான்' திரைப்படம் தொடங்கப்பட்டது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஏலியன்ஸாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் சிவகார்த்திகேயனுடன் ரகுல் ப்ரீத்தி சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைப்பாளராக கமிட் ஆகி இருந்தார். இதனால் ரசிகர்களுக்கு இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு தாறுமாறாக எகிறியது.
அயலான் படப்பிடிப்பு பாதி முடிந்த நிலையில், பட்ஜெட் பிரச்சினையால் ஷூட்டிங்கை தொடர முடியாமல் இடையில் நின்று போனது. இதனால் 2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சிவகார்த்திகேயனின் 'அயலான்' எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் காணப்படுகிறது.
அதாவது பட்ஜெட் பிரச்சினை, கிராபிக்ஸ் பணிகள் காரணமாக ரிலீஸ் தேதியை அறிவிக்காமல் இருந்து வந்த அயலான் படக்குழு இப்போது புதிய முடிவு ஒன்றினை எடுத்துள்ளார்களாம். அந்தவகையில் சிவகார்த்திகேயனின் அயலான் படத்திற்கு இரண்டு ரிலீஸ் தேதிகளை படக்குழு முடிவு செய்து வைத்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பொங்கலுக்கு விஜய்யின் 'வாரிசு', அஜித்தின் 'துணிவு' போன்ற திரைப்படங்கள் வெளியாகின்றன. அதேபோன்று பிப்ரவரி மாதம் தனுஷின் 'வாத்தி', சிம்புவின் 'பத்து தல' ஆகிய படங்கள் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை தவிர ஏப்ரலில் ரஜினியின் 'ஜெயிலர்', ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'சந்திரமுகி 2', பொன்னியின் செல்வன் செகண்ட் பார்ட்' உட்பட மேலும் ஒரு சில சில படங்கள் வெளியாகலாம்.
இதன் காரணமாக மார்ச் மாதம் 'அயலான்' படத்தை தனியாக களமிறக்க சிவகார்த்திகேயன் முடிவு செய்துள்ளாராம். இந்நிலையில் தான் தற்போது அயலான் ரிலீஸ் தேதியை படக்குழு முடிவு செய்துள்ளதாம். அதாவது இந்தப் படம் அடுத்தாண்டு மார்ச் 24 அல்லது 25-ஆம் தேதி வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
Listen News!