• Sep 20 2024

சத்தியாவாக மீண்டும் களமிறங்கும் ஆயிஷா- அதுவும் எந்த சீரியலில் என்ட்ரி கொடுக்கவுள்ளார் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரை ஒவ்வொன்றிலும் ரசிகர்களைக் கவரும் விதமாக பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அத்தோடு பல புதிய புதிய சீரியல்களும் ஆரம்பமாகி ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் ஷு தமிழில் புதிதாக ஆரம்பித்த சீரியல் தான் இதயம்.

இந்த சீரியலில் லீட் ரோலில் நடிகை ஜனனி நடித்து வருகின்றார். விபத்தில் சிக்கிய கணவன் இறந்து விட அவரது இதயம் கதாநாயகனுக்கு வைக்கப்படுகின்றது. இதனால் தனக்கு உயிர் தந்தவரின் குடும்பத்தை தன்னுடைய குடும்பமாக்கிக் கொள்ள போராடும் கதாநாயகனின் கதையாகவே இந்த சீரியல் அமைந்துள்ளது.


மேலும் கதாநாயகி நாயகனை மறுமணம் செய்து கொள்ள ஏற்றுக் கொள்வாரா அல்லது தன்னுடைய குழந்தையுடன் தனியாகத் தான் வாழ்வாரா என்பது எதிர்வரும் நாட்களில் தான் தெரியவரும்.இப்படியான நிலையில் இந்த சீரியலில் தற்பொழுது நடிகை ஆயிஷா சத்யாவாக மீண்டும் களமிறங்கவுள்ளதாக ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இதனால் இந்த சீரியலின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அத்தோடு ஆயிஷா சத்யா சீரியல் முடிவடைந்ததைத் தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement