பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசன் ஆனது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரமாண்டமாகத் தொடங்கப்பட்டது. 21 போட்டியாளர்களுடன் ஆரம்பமான இந்நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
இந்நிலையில் இதில் தற்போது 6 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர். அத்தோடு இதே சீசனில் முன்பு வெளியேறி இருந்த போட்டியாளர்கள் பலரும் அடுத்தடுத்து வருகை தந்து மீண்டும் பிக்பாஸ் வீட்டின் உள்ளே தங்கி பட்டையை கிளப்பி வருகின்றனர் என்று தான் கூற வேண்டும்.
இந்நிலையில் இன்றைய நாளில் அட்டகாசமான ஒரு நிகழ்வு இடம்பெறுகின்றது. அதில் சூப்பர் சிங்கர் பிரபலங்கள் பலரும் வீட்டிற்குள் உள் நுழைந்து இருக்கின்றனர். குறிப்பாக மா.கா.பா மற்றும் பிரியங்கா ஆகியோரும் நுழைந்து இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு சூப்பர் சிங்கர் போட்டியாளர்கள் ஒரு சிலர் பிக்பாஸ் போட்டியாளர்களை வைத்து பாட்டு ஒன்றினையும் பாடி அசத்தியுள்ளனர். அதுமட்டுமல்லாது பிரியங்கா அசீமை பார்த்து "பாத்ரூமிற்குள் அதை எடுத்திட்டுப் போனீங்களாமே உண்மையா" எனக் கிண்டலாக கேட்கின்றார்.
அதற்கு அசீம் பதில் சொல்ல முடியாமல் விழி பிதுங்க முழிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. பிரியங்கா ஏன் இவ்வாறு கூறினார் என்பதை சற்றுப் பொறுத்திருந்து இன்றைய எபிசோட்டில் பார்ப்போம்.
Listen News!