புகைப்படம் எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனைப் நடிகர் ராணா பிடுங்கி அந்த ரசிகரை அலைய விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2010ம் ஆண்டு லீடர் என்னும் திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகியவர் தான் ராணா டகுபதி. இதனைத் தொடர்ந்து தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தமிழில் அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார்.
இது தவிர ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படத்தில் செம வெயிட்டான வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்திருந்தார்.இறுதியாக இவரது நடிப்பில் விராட் பருவம் திரைப்படம் வெளியானது. இதில் சாய்பல்லவியும் நடித்திருந்தார்.
இந்நிலையில், தனது குடும்பத்தினருடன் திருப்பதி சென்ற ராணா, சாமி தரிசனம் செய்துவிட்டு கோயிலை விட்டு வெளியேறிய ராணாவுடன், ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க முயன்றார். நடந்து சென்று கொண்டிருந்த ராணாவுக்கு முன்பாக தனது செல்போனை நீட்டிய அந்த ரசிகர், 'சார் ஒரேயொரு செல்ஃபி" என பரிதாபமாகக் கேட்டார்.
ஆனால், கடுப்பான ராணா திடீரென செல்போனை பிடுங்கிவிட்டு சிறிது நேரம் அந்த ரசிகரை அலைய விட்டார். பின்னர் சிரித்துக் கொண்டே அந்த செல்போனை ரசிகரிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றார்.இந்த விடயம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதைக் காணலாம்.
Listen News!