• Sep 20 2024

கான்டீன் கைவிட்டுப்போனதால் கதறி அழும் பாக்கியா- சந்தோசத்தின் உச்சியில் கோபி- திமிர்பேச்சு பேசிய ராதிகா- Baakiyalakshmi Serial

stella / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

கணேஷ் துாங்காமல் எழும்பி இருந்து அமிர்தா பற்றி ஏதாவது தகவல் கிடைக்குமா எனத் தேடுகின்றார்.அப்போது அமிர்தாவின் காலேஜ் ஐடிகாட் புத்தகம் எல்லாவற்றையும் பார்த்து விடுகின்றார்.அப்போது உள்ளே ஏதோ சத்தம் கேட்கின்றது என கணேஷின் பெற்றோர் உள்ளே வந்து என்ன தேடுகின்றாய் என்று கேட்க கணேஷ் அமிர்தாவின் ஐடிகாட் புத்தம் எல்லாவற்றையும் எடுத்துக் காட்டுகின்றார்.


இதனால்அவர்கள் என்ன சொல்லுவதென்று தெரியாமல் தவிக்கின்றனர். பின்னர் அமிர்தாவை அவங்க அம்மா தான் கூட்டிட்டு போய்ட்டாங்க என்று சமாளிக்கின்றனர். தொடர்ந்து வீட்டில் கோபி சோகமாக இருக்க ராதிகா என்ன ஆச்சு என்று கேட்கின்றார். அப்போது கோபி ஆபீஸ் ரென்ஷன் அதுதான் சோகமாக இருப்பதாக கூறுகின்றார்.

அப்போது ராதிகா ஆபிஸ் பொறுப்பு முழுவதையும் கோடீஸ்வரன் சேர் என்கிட்ட தந்திட்டு போய்ட்டாரு, இந்த சந்தர்ப்பத்தை வைத்து பாக்கியாவின் கான்டீர் ஆடரை கான்சல் செய்து விட்டேன் என்று சொல்ல கோபி சந்தோசப்படுகின்றார். அத்தோடு அந்த இடியட்டை பழி வாங்கத் தான் வேணும் என்று ராதிகாவை பாராட்டுகின்றார்.


பின்னர் மறுநாள் கான்டீனுக்கான எலெக்ஷன் நடைபெறுகின்றது. அதில் யாருமே பாக்கியாவுக்கு வோர்ட் போடவில்லை. எல்லாமே ராதிகாவுக்கு சாதகமாக அமைந்தததால் ராதிகா பாக்கியாவை உங்க பெட்டியைக் கட்டிக் கொண்டு இப்பவே கிளம்புங்க என்று கூறுகின்றார்.இதனால் பாக்கியா என்ன செய்வதென்று தெரியாமல் அதிர்ச்சியில் இருக்கின்றார்.


மறுபுறம் பாக்கியா எலெக்ஷனில் ஜெயிச்சிருப்பார் என வீட்டில் எல்லோரும் சந்தோசமாக பேசிட்டு இருக்கும் போது அங்கு வரும் பாக்கியாவைக் கண்டதும் எல்லோரும் எல்லோரும் என்ன ஆச்சு என்று கேட்க பாக்கியா கதறி அழுகின்றார்.அப்போது அங்கு நடந்த விசயத்தைச் சொல்ல எல்லோரும் அதிர்ச்சியடைய ஈஸ்வரி ராதிகாவைத் திட்டுகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.



Advertisement

Advertisement