விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் காணப்படுகின்றனர்.அந்த வகையில் இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பது குறித்து ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அதில் பாக்கியாவின் கான்டீன் ஆடரை ராதிகா கான்சல் பண்ணியதால் வீதியில் பாக்கியாவை சந்திக்கும் கோபி நக்கலடிக்கின்றார்.அதில் கான்டீனை இழுத்துப் பூட்டீட்டாங்களா, வாழ்க்கையில என்ன பண்ணப்போறீங்க பாக்கியா மேடம் என்று கேட்கின்றார்.
அதற்கு பாக்கியா என் கையை விட்டுப் போன பிஸ்னசை திரும்பக் கொண்டு வருவேன். வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை கோபிநாத் என்று சொல்கின்றார்.அப்போது கோபி இந்த திமிர் பேச்சுக்கு மட்டும் எந்தக் குறைச்சலும் இல்லை என்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.
Listen News!