• Sep 20 2024

அமிர்தாவை எங்கும் போகவிடாமல் தடுக்கும் பாக்கியா- பணம் இல்லாமல் தவிக்கும் கோபி- கடும் குழப்பத்தில் ஈஸ்வரி- Baakiyalakshmi Serial

stella / 11 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

ராமமூர்த்தி நிலாவைக் கூட்டிட்டு பூங்காவுக்கு போகனும் என்று சொல்ல, பாக்கியா அதெல்லாம் வேணாம் மாமா, இப்போ கொசு அதிகமாகிடுச்சு. மலேரியா, டெங்கு எல்லாம் வருகின்றதாம். அதனால எங்கையும் போகதீங்க வீட்டிலையே இருங்க மாமா என்று சொல்கின்றார். அத்தோடு ஈஸ்வரியும் குழப்பத்தில் இருக்கின்றார்.


தொடர்ந்து ஈஸ்வரி அமிர்தாவைக் கூட்டிட்டு கோயிலுக்கு போய்ட்டு வாரேன் என்று சொல்ல, பாக்கியா அதெல்லாம் வேணாம் அத்தை அமிர்தா வீட்டில இருக்கட்டும். நிலாவுக்கு பசி வந்தால் அவள் இருக்கனும் தானே ஜெனியையும் பார்த்துக்கனும் அமிர்தா வீட்டில இருக்கட்டும் அத்தை நீங்களும் நானும் கோயிலுக்கு போய்ட்டு வருவோம் என்று கூட்டிட்டு போகின்றார்.

மறுபுறம் தனது நண்பரைச் சந்திக்கும் கோபி, கிரடிட் காட் 6 வைச்சிருக்கிறேன் ஆனால் ஒன்றிலையும் பணம் இல்லை, கம்பெனி  லொஸ் ஆகிடுச்சு. இருக்கிறதெல்லாம் வைச்சு தான் தொழிலாளிகளுக்கு சம்பளம் கொடுத்தேன். என்ன பண்ணப்போறேன் என்று தெரில, இதில ராதிகாவின் அம்மாவுக்கு 60வது பேர்த்டே வருதாம்.


அவங்களுக்கு என்ன வாங்கிக் கொடுக்கனும் என்று எங்க வீட்டு மகாராணி யோசிச்சு வைச்சிட்டா, செயின் வாங்கிக் கொடுக்கனுமாம். என்கிட்ட அவ்வளவு பணம் இல்லை, செயின் வாங்க நீ கொஞ்சம் பணம் தருவியா என்று கேட்க, அவரது நண்பன் ஏற்கனவே நீ வாங்கிய பணத்தை தரல இதில புதுசா வேற உனக்கு பணம் வேணுமா என்று திட்டி விட்டு கிளம்பிப் போகின்றார்.

பின்னர் வீட்டுக்கு வந்ததும் ராதிகா ஷாப்பிங் போவமா கோபி என்று கேட்க, கோபி தனக்கு தலையிடிப்பதாக சொல்லி விட்டு ரூமுக்குள் போகின்றார். அதனால் மயூவிடம் இன்னொரு நாள் ஷாப்பிங் போவோம் மயூ என்று சொல்கின்றார். தொடர்ந்து கோயிலுக்கு போய் விட்டு திரும்ப வரும் போது ஈஸ்வரி உன்னுடைய நடவடிக்கை சரி இல்லையே என்னாச்சு பாக்கியா என்று கேட்கின்றார்.


இதனால் பாக்கியா கணேஷ் விஷயத்தை ஈஸ்வரியிடம் சொல்லுவமா என்று பார்க்கின்றார். அப்போது ஈஸ்வரி அமிர்தா எழிலை திருமணம் செய்தது இப்பவும் எனக்கு பிடிக்கல தான். என்ன தான் இருந்தாலும் அமிர்தாவை எழில் கல்யாணமே பண்ணியிருக்க கூடாது என்று சொல்ல பாக்கியா இந்த விஷயத்தை அத்தை கிட்ட சொல்லவே கூடாது என்று யோசிக்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement