• Sep 20 2024

நிலாபாப்பாவை நினைத்து கண்ணீர் வடிக்கும் எழில்- திடீரென பாக்கியா எடுத்த முடிவு- செம குஷியில் கோபி- Baakiyalakshmi Serial

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுசுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

நிலாவுக்கு காய்ச்சல் என்பதால் அமர்தா நிலாவைத் துாக்கி வைத்துக் கொண்டிருக்கின்றார்.அப்போது பாக்கியா,ஈஸ்வரி எல்லோரும் நிலாவின் உடம்பக்கு இப்போ எப்பிடி இருக்கு என்று விசாரிக்கின்றனர். பின்னர் பாக்கியா தான் இங்கிலீஸ் வகுப்பை விடப் போவதாகச் சொல்கின்றார். அப்போது எழில் எதுக்காக இங்கிலீஸ் வகுப்பை விடப்போறம்மா என்று கேட்கின்றார்.


அப்போது பாக்கியா கேன்டீனில் ஒரு முறை தப்பு நடந்தால் பரவாயில்லை, இப்போ அடிக்கடி தப்பு நடக்கின்றது. அதை சரி பண்ணனும் நான் இதைக் கவனிக்காமல் இருந்தால் கேன்டீன் என் கையை விட்டு போய்டும் என்று சொல்கின்றார். இதனால் எல்லோரும் பாக்கியா எடுத்தது நல்ல முடிவு தான் என்று யோசிக்கின்றனர்.

பின்னர் எழில் நிலாவைத் துாக்பகி வைத்துக் கொண்டு கண் கலங்குகின்றார். ஓடித் திரிந்து விளையாடிய பொண்ணு இப்போ இப்பிடி படுத்திருக்கிறாளே என்று சொல்கின்றார். அப்போது அமிர்தா குழந்தைகள் என்றால் இப்படி அடிக்கடி காய்ச்சல் வரத் தான் செய்யும்.நீங்க கவலைப்படாதீங்க என்று ஆறுதல்ப்படுத்துகின்றார்.


பின்னர் விடிந்ததும் பாக்கியா இங்கிலீஸ் வகுப்புக்குச் சென்று இனிமேல் தான் வரமாட்டேன் என்றும் உங்களை எல்லாம் ரொம்ப மிஸ் செய்வேன் என்றும் சொல்கின்றார். அப்போது பழனிச்சாமி கவலைப்படாதீங்க மேடம் நாங்க இருக்கிறோம்ல, என்ன படித்தாலும் அதை உங்க கிட்டை சொல்லுவோம் நீங்க யோசிக்காதீங்க என்று சொல்கின்றார்.

தொடர்ந்து காலேஜ் எல்லாம் முடித்து விட்டு வீட்டில் இருக்கும் பாக்கியா இனியாவுடன் பேசிட்டு இருக்கும் போது பழனிச்சாமியும் சோபிதாவும் உள்ளே வருகின்றனர். அவர்களைப் பார்த்ததும் பாக்கியா சந்தோசப்படுகின்றார். அப்போது சோபிதா இங்கிலீங் வகுப்பில் எழுதியதை பாக்கியாவிடம் கொடுக்கின்றனர்.


மறுபுறம் பாக்கியாவின் வீட்டு வாசலில் பழனிச்சாமியின் பைக்கை பார்த்த கோபி லாம் போஸ்ட் உள்ள தான் இருக்கிறானா என்று யோசிக்கின்றார். பின்னர் இனியா வந்ததும் இது பற்றி கேட்க இனியா, அம்மா இங்கிலீஸ் வகுப்புக்கு இனிமேல் போகமாட்டாங்க அது தான் பார்க்க வந்திருக்கிறாங்க என்று சொல்ல கோபி பாக்கியா இனிமேல் கிளாசிற்கு போகமாட்டாளா என்று கேட்டு சந்தோஷப்படுகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.





Advertisement

Advertisement