• Sep 20 2024

அண்ணன் தம்பிகளின் வாழ்க்கைக்காக தனம் எடுத்த முடிவு- மகிழ்ச்சியில் மொத்தக் குடும்பம் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இறுதி எப்பிஷோட்

stella / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாணடியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் என்றுடன் முடிவுக்கு வருகின்றது. எனவே இறுதி எப்பிஷோட் என்னவென்று பார்ப்போம்.

பொங்கல் வைப்பதற்காக எல்லோரும் கோயிலில் நிற்கின்றனர். அப்போது முல்லை தன்னுடைய அம்மாவிடம் எதுவும் தேவையில்லாமல் பேசிடாத என்று சொல்லிக் கூட்டிக் கொண்டு போகின்றார். தனத்தின் அம்மா தன்னுடன் சண்டைக்கு வந்தாலும் வாயை மூடிக் கொண்டு பேசாமல் இருக்கின்றார். இதைப் பார்த்த மீனா முல்லையிடம் உங்க அம்மா மாதிரி இருக்கிற வேற யாரையாவது கூட்டிட்டு வந்திட்டீங்களா என்று கேட்கின்றார்.


பின்னர் எல்லோரும் சேர்ந்து பொங்கல் வைக்கும்போது சூப்பர் மார்க்கெட் தறக்கிறதுக்கு ஓகேசொல்லிவிட்டாங்க என்று சொல்ல எல்லோரும் சந்தோசப்படுகின்றனர். அத்தோடு மீனாவின் அப்பா ஜனார்த்தனன் சொத்துப் பத்திரத்தைக் கொடுக்க ஜீவா என் கஷ்டங்களில் எல்லாம் என்கூட இருந்த மீனா தான் என் சொத்து எனக்கு வேற எதுவும் வேண்டாம் என்கின்றார்.

தொடர்ந்து தனம் எல்லோர் முன்னாடியும் ஒரு விஷயத்தைச் சொல்கின்றார். அதாவது இனிமேல் வீட்டுக்குள்ள ஒன்றாக இருந்தாலும் அவங்க அவங்க பிஸ்னஸை அவங்களே பார்த்துக்கட்டும். ஜீவா சூப்பர் மார்க்கெட்டை பார்த்துக்கட்டும், மாமா கடையைப் பார்த்துக்கட்டும், கதிர் ஹொட்டலைப் பார்த்துக்கட்டும், கண்ணனுக்கு பாங் வேலை இருக்கு தானே என்று சொல்கின்றார்.


இதனைக் கேட்டு எல்லோரும் சந்தோசப்படுகின்றனர். அத்தோடு இனிமேல் அவங்க அவங்க விஷயத்தில் அவங்களே முடிவெடுக்கட்டும் என்றும் சொல்கின்றார். தொடர்ந்து ஐஸ்வர்யா கண்ணனுக்கு அனுப்புவதற்காக எல்லோருடனும் சேர்ந்து வீடியோ எடுக்கின்றார். இத்துடன் சீரியல் முடிவடைகின்றது.




Advertisement

Advertisement