• Sep 20 2024

ஆயிஷா எலிமினேட் ஆன போது விக்ரம் செய்த மோசமான காரியம்- இதனால் தான் அவர் வெறுப்பை கொட்டினாரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 9-ந் தேதி தொடங்கியது. 21 போட்டியளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது 11 போட்டியாளர்கள் மாத்திரமே உள்ளனர். மேலும் கடந்த வாரம் ராம் மற்றும் ஆயிஷா ஆகியோர் வெளியேறினார்கள்.

இதனை அடுத்து இந்த வாரம் யார் வீட்டை விட்டு வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் அதிகமாகவே காணப்படுகின்றது. மேலும் இந்த வாரம் நடைபெற்ற தலைவருக்கான டாஸ்க்கில் மைனா நந்தினி தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

இவர் மூன்றாவது முறையாக பிக்பாஸ் வீட்டின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இது ஒரு புறம் இருக்க நேற்றைய தினம் எலிமினேட் ஆகி வீட்டை விட்டு ஆயிஷா செல்லும் போது அனைவருடனும் ஒழுங்காகப் பேசினார். ஆனால் விக்ரமனுடன் மட்டும் நக்கலாகப் பேசினார்.


இது குறித்து மணிகண்டன் மைனாவுக்கு கூறியுள்ளார். அதாவது எலிமினேட் ஆனது ஆயிஷா தான் என்றதும் விக்ரமன் கை தட்டியுள்ளாராம். இதனால் கடுப்பானதால் தான் ஆயிஷா விக்ரமனிடம் நக்கலாகப் பேசியதாகவும் கூறியுள்ளார். இது குறித்த வீடியோ வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement