• Sep 20 2024

மேன்மக்கள் மேன்மக்கள் தான்.. பாலா, சூர்யா ஒருவருக்கொருவர் செய்த நெகிழ்ச்சியான செயல்கள்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 'வணங்கான்என்ற திரைப்படம் உருவாகி கொண்டிருந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த படத்தில் இருந்து சூர்யா விலகினார் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது சூர்யாவுக்கு பதில் அருண் விஜய் இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து டப்பிங் உள்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் 'வணங்கான்படத்தில் இருந்து சூர்யா விலகி விட்டாலும் பாலா மீது சூர்யா மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும் அதேபோல் சூர்யா மீதும் பழைய அன்பு குறையாமல் பாலா இருப்பதாகவும் கூறப்படுகிறது.



குறிப்பாக 'வணங்கான்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் செய்ய திட்டமிட்டபோது சூர்யா இருக்கும் தெருவில் மட்டும் போஸ்டர் ஒட்ட வேண்டாம் என்று பாலா கேட்டுக் கொண்டதாகவும் அந்த போஸ்டரை பார்த்தால் சூர்யா வருத்தப்படுவார் என்பதால் தான் அவர் அவ்வாறு கூறியதாகவும் தெரிகிறது.

அதேபோல் 'வணங்கான்படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடந்த போது சூர்யா அந்த படத்தை தயாரித்து வந்தார் என்பதும் அந்த படத்தில் இருந்து அவர் விலகிய போதிலும் ஏற்கனவே செலவு செய்த சில கோடிகளை அவர் பாலாவிடம் கேட்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

'வணங்கான்படத்திற்காக செலவழித்த பணத்தை சூர்யா எப்போதும் கேட்க மாட்டார் என்றும் அது பாலா மீது அவர் வைத்த மரியாதை காரணமாக பணத்தை அவர் விட்டுக் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. அதேபோல் 'வணங்கான்படத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் சூர்யா மீது சற்றும் அன்பு குறையாமல் பாலா நடந்து கொண்டதாகவும் இப்போது கூட அவர் அவ்வப்போது தொலைபேசியில் சூர்யாவிடமும் சிவகுமாரிடமும் பேசி நலம் விசாரித்து கொள்வதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement