• Sep 20 2024

ஹீரோவைத் தொடர்ந்து ஹீரோயினையும் மாற்றிய பாலா..தற்போது யார் தெரியுமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சூர்யா விலகியதை தொடர்ந்து  தற்போது அருண் விஜய் நடிப்பில் 'வணங்கான்' படத்தை இயக்குவதற்கான பணிகளை இயக்குநர் பாலா முழுவீச்சில் ஆரம்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 'வணங்கான்' படத்திற்காக ஆர்வமுடன் காத்திருந்த ரசிகர்கள் தலையில் இடியை இறக்கும் விதமாக சூர்யா இந்த்ப்படத்தில் இருந்து விலகினார். சூர்யாவிற்கு திரையுலகில் திருப்புமுனை அளித்த 'நந்தா' பட இயக்குநர் படத்திலிருந்து சூர்யா பாதியில் விலகியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இதுக்குறித்து பல்வேறு யூகங்கள் இணையத்தில் வட்டமடித்தாலும் படக்குழுவினர் தரப்பில் இருந்து எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை.

நீண்ட இடைவேளைக்கு பின்னர் சூர்யாவும், பாலாவும் 'வணங்கான்' படத்தில் இணைந்தனர். பூஜையுடன் இதன் படப்பிடிப்பும் துவங்கியது. 2டி எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவான இந்தப்படத்தில் கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமானர். சூர்யா 'வணங்கான்' படத்தில் இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும் சொல்லப்பட்டது.

இதன் படப்பிடிப்பு துவங்கி விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் சூர்யாவுக்கும், பாலாவுக்கும் இடையில் உரசல்கள் ஏற்பட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகின. ஆனால் இதுக்குறித்து இரண்டு தரப்பினரும் எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை. இவ்வாறுஇருக்கையில்  திடீரென 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகுவதாக நாங்கள் இரண்டு பேரும் பேசி முடிவெடுத்தோம் என அறிக்கை ஒன்றை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார்.


சூர்யா தரப்பும் இதனை ஆமோதித்து பாலா அண்ணாவுடன் எப்போதும் துணை நிற்போம் என தெரிவித்திருந்தது. திடீரென 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகியதாக அறிவித்ததது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. இப் படப்பிடிப்பு தளத்தில் ஒரே காட்சியை மறுபடியும் மறுபடியும் எடுத்ததாகவும், சூர்யாவை வெறும் காலுடன் பாலா மீண்டும் மீண்டும் ஓட வைத்ததாகவும், இதனால் இரண்டு பேருக்கும் இடையில் மோதல் உருவானதாக தகவல்கள் வெளியாகி  பெரும் பரபரப்பை கிளப்பியது.

இந்நிலையில் சூர்யா விலகினாலும் 'வணங்கான்' பட வேலைகள் நடைபெறும் என பாலா  கூறியிருந்தார். அவர் கூறியதை படத்தின் வேலைகள் தற்போது மீண்டும் விறுவிறுப்புடன் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அருண் விஜய் நடிப்பில் 'வணங்கான்' படத்தினை பாலாவே தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கன்னியாகுமரியில் இன்னும் சில தினங்களில் படப்பிடிப்பு துவங்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


லேட்டஸ்ட் தகவலாக 'வணங்கான்' படத்தின் நாயகியும் மாற்றப்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது.பாலாவே தாய்ரிப்பதால் குறைந்த பட்ஜெட்டை படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளாராம். இதனால் தற்போது கீர்த்தி ஷெட்டிக்கு பதிலாக ரோஷினி பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்தோடு இவர் ஏமாலி, ஜடா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement