சன் டிவியில் இயக்குநர் திருச் செல்வம் இயக்கத்தில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சூப்பர் ஹிட் சீரியல் தான் எதிர் நீச்சல். இந்த சீரியல் இல்லத்தரசிகள் முதல் இளைஞர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் தொடர்ந்து நல்ல ஆதரவைப் பெற்று வருகின்றது.
இந்த தொடர் முதலில், திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பாகி வந்த நிலையில் கடந்த ஓரிரு வாரங்களாக ஞாயிற்றுக்கிழமையிலும் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த சீரியலை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
பிறந்த வீட்டில் சுதந்திரமாக வளர்க்கப்பட்டு, நன்கு படித்த பெண்கள் வசதி படைத்த வீட்டிற்கு திருமணமாகி வந்தாலும், ஆணாதிக்கத்தால் அடிமைப்படுத்தப்படும் பெண்கள் தமது அடிமைத்தனத்திற்கு குரல் கொடுக்கும் விதமாக இந்த சீரியல் எடுக்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகின்றது.
இந்த சீரியலில் ஜீவானத்தத்திற்கு உதவியாளரான பர்ஹானா என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ஸீபா ஷெரின். இவரை எதிர்நீச்சல் சீரியலுக்காக பரிந்துரை செய்தவர் எதிர்நீச்சல் தொடரில் நடித்து வரும் வைஷ்ணவி தானாம். ஆடிஷனில் நன்றாக பர்ஃபார்ம் செய்ததால், அவரையே பர்ஹானா கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார்கள்.
எனினும் பர்ஹானா முக்கிய கண்டிஷன் ஒன்றையும் போட்டுள்ளார். அதாவது திரையில் ஹிஜாப் அணிந்தவாறு தான் நடிப்பை என கூற, இதற்கு திருச்செல்வமும் சம்மதம் தெரிவித்துள்ளார்.ஸீபா ஷெரின் தொடர்ந்து, ஹிஜாப் அணிந்து நடித்து வருவதால், தேசிய அளவில் தொலைக்காட்சி தொடர் ஒன்றிலும், சீரியல் வரலாற்றிலும், முஸ்லிம் நடிகை ஒருவர் ஹிஜாப் அணிந்து நடித்து வருவது இதுவே முதல் முறை என்பதால் இதற்கு பலரும் தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் ஆங்கில ஊடகங்களும் இதனை உற்று நோக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
Listen News!