• Sep 20 2024

எதிர் நீச்சல் சீரியலில் இருந்து விடைபெற்ற பட்டம்மாள்- கதறி அழும் மருமகள்கள்- நடந்தது தான் என்ன?

stella / 10 months ago

Advertisement

Listen News!


சன்டிவியில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல். இந்த சீரியலில் அப்பத்தாவின் கிராமத்திற்கு குணசேகரன் தன்னுடைய குடும்பத்தாருடன் சென்றிருந்தார்.

அங்கே குணசேகரனின் சூழ்ச்சியால் அப்பத்தா மயக்கத்தில் இருக்கின்றார்.இதனால் குணசேகரன் தன்னுடைய தம்பிமார்களுடன் அப்பத்தாவை ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு போனார். இருப்பினும் எந்த ஹாஸ்பிட்டலிலும் சேர்க்கவில்லை.


பின்னர் ஞானமும் கதிரும் குணசேகரனும் அப்பத்தாவும் இல்லாமல் தங்களுடைய வீட்டுக்கு போகின்றனர். இப்படியான நிலையில் அப்பத்தாவை காருக்குள் வைத்து விட்டு குணசேகரன் தன்னுடைய தம்பிமார்களுடன் இருக்கும் போது காரில் தீ விபத்து ஏற்பட்டு அப்பத்தா உயிரிழந்து விட்டதாக கூறப்படுகின்றது.


இதனால் இந்த சீரியல் இனி எப்படியான திருப்பத்துடன் ஒளிபரப்ப்படப்போகின்றது என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.

Advertisement

Advertisement