• Sep 20 2024

“ பத்து தல” படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு தீண்டாமை கொடுமை...இதனை சிம்பு தட்டிக் கேப்பாரா..? தீயாய் பரவும் வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சிம்புவின் நடிப்பில்  இன்று வெளியாகி உள்ள திரைப்படம் 'பத்து தல' .  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தில் சிம்புவுடன் இணைந்து கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர், கௌதம் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

 இந்த ஆண்டு ரிலீஸ் ஆகும் முதல் சிம்பு படம் இது என்பதால் தியேட்டர்களில் ரசிகர்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர்.

அதுமட்டும்மல்லாது பத்து தல படம் பார்த்த ரசிகர்கள் படம் எப்படி இருக்கின்றது என்பது தொடர்பாக டுவிட்டரில் தங்கள் விமர்சனத்தை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது ஒரு வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.அதுஎன்னவென்றால் இப்படத்தின் முதல் காட்சிக்கு டிக்கெட் இருந்தும் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த இருவரை ரோகினி திரையரங்கு ஊழியர்கள் அவர்களை உள்ளே விட மறுத்துள்ளார்கள்.

இவ்வாறுஇருக்கையில் அருகே இருந்த ரசிகர்கள் ரோகினி திரையரங்கு ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அதற்கான ஞாயத்தை கேட்கின்றனர்.இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வெளியாகி கண்டனத்திற்குள்ளாகி உள்ளது. 



Advertisement

Advertisement