விஜய் தாெலைக்காட்சியில் பிரபலமாக ஔிபரப்பாகும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ், இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் சுய முகத்திரையை வெளியில் கொண்டு வருவதற்கான ஒரு களமும் இதுவாகத்தான் இருக்கும்.
அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு ஒரு வாரத்தினை கடந்துள்ளது, இம்முறையும் சண்டைகள் ஆரம்பித்து விட்டது. அந்தவகையில் குறித்த நிகழ்ச்சியில் முதல் வாரத்திலையே அனன்யா எலிமினேஷனில் போய்விட்டார். இந் நிலையில் பவா செல்லத்துரையும் வெளியேறி இருக்கின்றார். கடந்த பிக்பாஸ் சீசன்களில் ரசிகர்களால் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் இருக்கின்றார்கள், சிலர் இந்த வீட்டுக்குள் தங்களால் இருக்க முடியவில்லை என தாமாகவே வெளியேறியும் உள்ளனர். ஒவியா பரணி என்பவர்கள் இவ்வாறு வெளியேறி உள்ளனர். அதே போன்று பவா செல்லத்துரையும் அந்த சூழல் தனக்கு பிடிக்கவில்லை என வெளியேறி இருக்கின்றார்.
மிகச் சிறந்த்எழுத்தாளராக இருந்த பவா மிக குறுகிய காலத்திலையே பிக்பாஸ் வீட்டைவிட்டு வளியேறுவது வருத்தமான விடயம், ஆனா் இந் நிகழ்ச்சிக்கு வந்த பின்னர் பவா மீது திருட்டுப்பழி விழுந்திருக்கின்றது. அதாவது ஜோவிகா விசித்திராவுக்கு இடையில் படிப்பு பற்றி எழுந்த சண்டைக்கு படிப்பு அவசியம் இல்லை என இவர் சொல்லியிருக்கிறார். இது தவறு என சேலத்தினை சேர்ந்த கவிஞர் புகழேந்தி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். தன்னுயை கதையை பவா திருடி விட்டதாகவும் கூறியிருக்கின்றார்.
Listen News!