திரையுலகில் 'பத்ரி' என்ற தெலுங்கு படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ரேணு தேசாய். இதனைத் தொடர்ந்து 'ஜேம்ஸ் பாண்டு' என்ற படம் மூலம் தமிழ் திரையுலகிலும் காலடி எடுத்து வைத்து விட்டார். இவ்வாறு படங்களில் பிஸியாக நடித்து வந்த ரேணு தேசாய் நடிகர் பவர் ஸ்டார் பவன் கல்யாணை காதலித்து கடந்த 2009-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள்.
சந்தோசமாக தமது குடும்ப வாழ்க்கையை நடாத்தி வந்த பவண் கல்யாணும், ரேணு தேசாயும் கடந்த 2012-ஆம் ஆண்டு முறைப்படி விவாகரத்து பெற்றுப் பிரிந்து கொண்டார்கள். இதையடுத்து ரேணு தேசாய் தனது மகன் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். அதுமட்டுமல்லாது தனது பொழுதைக் கழிப்பதற்காக சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகின்றார்.
இந்நிலையில் தன்னுடைய உடல்நலம் குறித்து திடீர்ப் பதிவு ஒன்றினைப் பகிர்ந்திருக்கின்றார் ரேணு தேசாய். அதில் அவர் கூறுகையில் "கடந்த சில ஆண்டுகளாக நான் இதய நோய் மற்றும் சில உடல்நலப் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகிறேன் என்பது எனக்கு நெருக்கமானவர்கள் அனைவருக்கும் தெரியும். சில நேரங்களில் இது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது" என்றார்.
மேலும் "என் உடல்நல பிரச்சனை குறித்து இன்று போஸ்ட் செய்வதற்கு காரணம் ஒன்று இருக்கிறது. அதாவது எது நடந்தாலும் தைரியமாக இருக்க வேண்டும் என்று பல பிரச்சனைகளுடன் போராடும் பலருக்கும், மற்றும் எனக்கும் நினைவூட்டத் தான் இந்த போஸ்ட் போட்டுள்ளேன். எப்போதுமே வாழ்க்கை மற்றும் உங்கள் மீதான நம்பிக்கையை இழந்துவிடாதீர்கள். இந்த பிரபஞ்சம் நமக்காக நல்ல திட்டங்கள் வைத்திருக்கின்றது. 'ஸ்கிப்பர் தி பென்குயின்' சொல்வது போன்று சில நேரங்களில் 'ஸ்மைல் அன்ட் வேவ்'" எனவும் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாது "சிகிச்சைகள், மருந்து, யோகா எல்லாம் நல்லபடியாக போய்க் கொண்டிருக்கிறது. நான் குணமாகி விரைவில் ஷூட்டிங்கில் கலந்து கொள்வேன் என நம்புகிறேன்" எனவும் ரேணு தேசாய் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார். ரேணு தேசாயின் இந்த போஸ்ட்டை பார்த்த ரசிகர்கள் "நிச்சயம் நீங்கள் குணமடைந்து விடுவீர்கள். உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம். உங்களுக்காக பிரார்த்தனை செய்கிறோம்" எனக் கூறி ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
Listen News!