தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை லொஸ்லியா. இவர் விஜய் டீவியில் ஒளிபரப்பான 'பிக்பாஸ்' நிகழ்ச்சி மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இலங்கையைச் சேர்ந்த இவர் பிக்பாஸில் போட்டியாளராக இணைந்து கொள்வதற்கு முன்னர் இலங்கையில் உள்ள ஒரு சேனலில் செய்தி தொகுப்பாளராக பணியாற்றி இருக்கின்றார்.
இதன் மூலமாகவே இவருக்கு 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. கவின் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மீது அவருக்கு இருந்த மோகத்திற்காக இவருக்கென தனி ஆர்மி கூட உருவாக்கப்பட்டது, எனினும் பின்னர் இது வதந்தியாக மாறியது. இந்நிகழ்ச்சியில் 3 ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டதோடு பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனங்களையும் கொள்ளை கொண்டு இருக்கின்றார்.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார் லொஸ்லியா. அந்த வரிசையில் இறுதியாக ஹர்பஜன் சிங் மற்றும் சிவாவுடன் 'ப்ரெண்ட்ஸிப்' படத்தில் நடித்து புகழ் பெற்றார். இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்தும் வருகிறார். இருப்பினும் இவர் எதிர்பார்த்த அளவிற்கு இவருக்கு பட வாய்ப்புக்கள் வந்து குவியவில்லை.
இதனைத் தொடர்ந்து தற்போது சமூக வலைத்தளங்களின் பக்கமாக தனது கவனத்தை திருப்பியிருக்கின்றார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றார். இந்த வரிசையில் தற்போதும் தனது புகைப்படத்தை வெளியிட்டிருக்கின்றார். அதில் இவர் தன்னுடைய காலைத் தூக்கி கடுமையாக போஸ் கொடுத்திருக்கின்றார். அதனோடு இணைந்த வகையில் ஒரு வீடியோவையும் பதிவிட்டிருக்கின்றார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் உங்களுக்குள் இப்படி ஒரு திறமையும் இருக்கின்றதா எனக் கேட்டு தமது கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.
Listen News!