• Sep 20 2024

அழகு மட்டும் போதாது அறிவும் வேண்டும் அவர் கிட்ட நிறையவே இருக்கு- கீர்த்தி சுரேஷை கமல் பாராட்டியதற்கு இது தான் காரணமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் கீர்த்தி சுரேஷ். தமிழில் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகினார்.அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் உடன் இணைந்து ரஜினி முருகன் என்ற படத்தில் நடித்தார். கமர்சியலான அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்ததோடு கீர்த்தியை மிகப்பெரிய இடத்திற்கும் கொண்டு போய் சேர்த்தது. 

தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் நடித்து ஒரு நிலையான இடத்தை அடைந்தார் . பாலிவுட் நடிகைகளை போல தனது உடலை ஸ்லிம்மாக மாற்றி இருக்கும் இவர் தற்பொழுது தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார்.


சமீபத்தில் வெளியான மாமன்னன் திரைப்படத்திலும் ஒரு நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் கீர்த்தி. இந்த நிலையில் மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் கமல் கீர்த்தியை மனதார பாராட்டி இருப்பார்.

இதுவரை கமல் எந்த நடிகையையும் இந்த மாதிரி பாராட்டியது இல்லை. அதாவது புத்திசாலியான பெண், அறிவுமிக்க பெண், அழகு மட்டும் இருந்தால் போதாது கூட அறிவும் இருக்க வேண்டும். அது கீர்த்திக்கு நிறையவே இருக்கின்றது என பாராட்டி இருப்பார். அதற்குப் பின்னணியில் ஒரு காரணம் இருப்பதை பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறினார்.


அதாவது கீர்த்தி இயல்பாகவே ஒரு கவிஞராம். மலையாளத்தில் பல கவிதைகளை எழுதி இருக்கிறாராம். அது மட்டும் இல்லாமல் புத்தகங்களை நாள்தோறும் படிக்க கூடியவராம். சிறுகதை நாவல் என தன்னுடைய பொழுதுபோக்கை புத்தகங்களில் கழிப்பவராம். படப்பிடிப்பிற்கு இடையில் கூட புத்தகங்களை தான் வாசிப்பாராம்.

இந்த ஒரு பழக்கம் அன்றைய காலகட்டத்தில் ஜெயலலிதாவிற்கு இருந்தது. அதே பழக்கத்தை இப்போது கீர்த்தி சுரேஷ் பயன்படுத்திக் கொண்டு வருகிறார். இதை ஒரு வேளை கமல் அறிந்திருப்பார். அதனாலயே மேடையில் அவரை பாராட்டி இருப்பார் என செய்யாறு பாலு கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement