தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக விளங்குபவர் கார்த்தி. இவர் பருத்தி வீரன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு இப்படத்திற்காக தேசிய விருதினையும் பெற்றார்.
தொடர்ந்து பையா, சிறுத்தை, கொம்பன், தீரன் அதிகாரம் 1, கைதி எனப் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இதனால் இவருடைய படங்களுக்கான எதிர்பார்ப்பானது ரசிகர்கள் இடையே அதிகரித்துக் காணப்படுகின்றது.
அந்த வகையில் இவரது நடிப்பில் தற்பொழுது உருவாகியுள்ள திரைப்படம் தான் விருமன். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அப்போது நீண்ட விடுமுறை வருவதால் அந்த தேதியைப் படக்குழு முடிவு செய்துள்ளது.
முன்னதாக இந்த படத்தின் முதக் சிங்கிள் பாடலான ‘கஞ்சா பூவு கண்னால’ என பாடல் மே 25 ஆம் தேதி ரிலீஸானது. இணையத்தில் வைரல் ஹிட்டான இந்த பாடல் தற்போது 8 மில்லியன் பேரால் பார்க்கப்பட்டுள்ளது. இதை விருமன் படத்தின் ஆடியோ உரிமையைப் பெற்றுள்ள சோனி மியூசிக் நிறுவனம் அறிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- பாரிஸில் வெள்ளை புறா போல உடையணிந்து நிற்கும் நடிகை ப்ரியங்கா சோப்ரா- கியூட் கிளிக்ஸ்
- படிக்கட்டில் கூட ஏறமுடியாத அளவுக்கு பெரிய ஆடை அணிந்து பிரபல நிகழ்சிக்கு சென்ற சிவாங்கி
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!