• Sep 20 2024

கணவர் என்பதால் எல்லாம் அவருக்கு மரியாதை கொடுக்க முடியாது- டிவி நடிகை பொளேர்

Cine / 2 years ago

Advertisement

Listen News!

இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் சாரு அசோபாவும், பிரபல பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென்னின் தம்பியும், நடிகருமான ராஜீவும் காதலித்து கடந்த 3 மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தார்கள்.

திருமணமான சில மாதங்களிலேயே அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. லாக்டவுன் நேரத்தில் தன்னை தனியாக விட்டுவிட்டு சென்றுவிட்டார் ராஜீவ் என்றார் சாரு. மீண்டும் திரும்பி வந்த ராஜீவை ஏற்றுக் கொண்டு வாழ்ந்தார்.

ஜியானா சென் என்கிற மகளை பெற்றெடுத்தார். இந்நிலையில் மீண்டும் அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். விவாகரத்து கோரி நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார் சாரு.

இது குறித்து அவர் தெரிவித்ததாவது….

விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிவிட்டேன். மேலும் அதில் நான் தெளிவாக இருக்கிறேன். ராஜீவ் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று எப்பொழுதும் பிரார்த்தனை செய்வேன்.

ஆனால் வயதில் மூத்தவர், கணவர் என்பதால் எல்லாம் அவருக்கு மரியாதை கொடுக்க முடியாது. நான் மதிக்கும் ஒருவரை திருமணம் செய்தேன். ஆனால் அவரோ என்னை பற்றி பல பொய் சொல்லியிருக்கிறார். அதனால் தான் வேதனை அடைந்தேன். எங்களுக்கு இடையேயான பிரச்சனையை தீர்க்க முடியாது. அதிசயம் நடக்குமா என்றால் தெரியாது என்றார்.

Advertisement

Advertisement